districts

img

திரிசூலத்தில் மக்களின் எதிர்ப்பை மீறி 2 வீடுகளுக்கு சீல்

சென்னை, ஜூன் 28 - திரிசூலத்தில் மக்களின் கடும் எதிர்ப்பை யும் மீறி அறநிலையத்துறை அதிகாரிகள் 2 வீடுகளுக்கு சீல் வைத்தனர். திரிசூலம் ஊராட்சியில் திரிசூலநாதர் கோவில் நிலத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில், சிவசக்தி கர, ஜெ.ெஜ.நகர் பகுதிக ளில் உள்ள வீடுகளை அகற்ற நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரம் குடியிருப்பு களுக்கு சீல் வைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் வந்தனர். அதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து திரும்பி சென்றனர். இதனையடுத்து 36 வீடுகளுக்கு சீல்  வைக்க செவ்வாயன்று (ஜூன் 28) காவல் துறையோடு அதிகாரிகள் வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இணைந்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளை நுழைய விடாமல் தடுத்தனர். இதனால் அங்கு கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அசாதாரண சூழல் உருவானது. ஒரு  சிலர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டும்,  டவர்களில் ஏறியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனையும் மீறி ஒரு கடை, ஒரு வீட்டிற்கு சீல் வைத்தனர். இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவர் வ.செல்வம் கூறுகை யில், “அறநிலையத்துறை அமைச்சரின் அறிவிப்பை ஏற்று அப்பகுதி மக்கள் வாடகைதாரர்களாக மாற்றிக்கொள்ள தயாராக உள்ளனர். அதனை துறை அதிகாரி கள் ஏற்காமல், அச்சுறுத்தும் நடவடிக்கை யில் ஈடுபட்டு வருகின்றனர். நீதிமன்றங்க ளும் வழக்குகளை முறையாக கையாளமல் தீர்ப்புகளை வழங்குகின்றன. கோவில் நிலங்களில் குடியிருப்போர் தங்களை வாடகைதாரர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று துறை அமைச்சர்  சேகர்பாபு கடந்த ஜூன் 18ந் தேதி அறிவித்தார். இதற்கு மாறாக துறை அதிகாரி கள் செயல்படுகின்றனர். மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அரசு செயல்பட வேண்டும்.” என்றார். இந்தப்  போராட்டத்தில் சமய நிலங்களை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகள் எஸ்.வெள்ளைச்சாமி,  நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.தாமோதரன், வியாபாரிகள் சங்கத் தலைவர் பி.ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.