சென்னை, பிப்.12- சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்சி எஸ் 23 என்ற புதிய செல்போனை அறி முகம் செய்துள்ளது. இந்த செல்போனை வாங்குவதற்கு முதல் 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 40,000 ஆயிரம் பேர் முன்பதிவு செய்தனர். இந்த செல்போன் சுற்று சூழல் தாக்கத்தை கொண்டதாகும். அட்டகாசமான கேமரா திறன்கள், வரும்கால தொழில்நுட்பத்திற்கான தயார் நிலை, மொபைல் விளையாட்டு உள்ளிட்ட அம்சங்களை கொண்டது. இந்த செல்போன் டில்லி அருகே நொய்டாவில் உள்ள ஆலையில் தயாரிக்கப்பட்டது என்று சாம்சங் இந்தியாவின் மொபைல் வர்த்தக பிரிவு மூத்த இயக்குனர் குஃப்ரான்ஆலம் கூறினார். புதிய செல்போன் முற்றிலும் புதிய 200எம்பி சென்சாருடன் தனித்துவமான விவரங்களுடன் படங்களை எடுக்கும் வகையில் அடாப்டிவ் பிக்சல்களுடன் வருகிறது. சூப்பர் குவாட் பிக்சல் உடன், ரியர் கேமரா 50 விழுக்காடு வேகமாக ஃபோக்கஸ் செய்யும் என்று அவர் கூறினார்.