districts

img

ரூ. 15 கோடி சீட்டு பணம் மோசடி: காவல்துறையில் பெண்கள் புகார்

திருவண்ணாமலை, ஏப். 27- திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்தில் செவ்வாயன்று (ஏப். 27) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் எம்.வீரபத்திரன், எம்.சந்திரசேகரன்,  வழக்கறிஞர் எஸ்.அபி ராமன் ஆகியோர் தலைமையில், திருவண்ணாமலை நகர பெண்கள் பலர் புகார் மனுக்களை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை முத்து விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் தேவநாதன், அவரது உறவினரும் ஆட்சியர்  அலுவலக ஊழியருமான கேசவராஜ் ஆகிய இருவரும் அதே பகுதியில்  அலுவலகம் வைத்து, பொதுமக்களிடம், ரூ. 5 லட்சம், ரூ. 4 லட்சம்,  ரூ. 3 லட்சம், ரூ. 2 லட்சம், ரூ.  1 லட்சம் என  பல்வேறு குரூப்களில்  சீட்டு நடத்தி 300க்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூலித்துள்ளனர்.   அந்த சீட்டுக்கள் முடிவடைந்த பின்னரும்,  பணத்தை உரியவர்களி டம் வழங்காமல் காலம் கடத்தி வந்துள்ளனர். இதையடுத்து, பணத்தை பறிகொடுத்தவர்கள், கடந்த மார்ச் மாதம்  பல இடங்களில் தேவநாதனை தேடிய பின்னர், அவர் ஊரில் இல்லை  என்பது உறுதியானது. பின்னர்  கேசவராஜிடம் சென்று பணத்தை கேட்ட போது, உரிய பதில் அளிக்காமல் கேள்வி கேட்டவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தங்களின் பணத்தை  மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.