திருக்கோவிலூர், ஜூலை 8- விழுப்புரம் மாவட்ட காவல்துறை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அரகண்டநல்லூர் காவல் நிலைய பகுதியில் துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையிலான தனிப்படை காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த கலையழகன் ( 60) என்பவரை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் இருந்தது. பின்னர் அவரை கைது செய்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.