districts

பல்லாவரம் மின் கோட்டம் விரைவில் துவக்கம்

சென்னை, மே 4-   பல்லாவரம் தொகுதி அஸ்தினாபுரம் பகுதியில் 33 கே.வி. புதிய துணை  மின் நிலையம் அமைக்க நிலம் கையகப் படுத்தும் பணிகள் முடிந்தவுடன், துணை மின் நிலையம் அமைக்கும் பணி தொடங்கும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். சட்டப்பேரவையில் புதனன்று  கேள்வி நேரத்தில், பல்லாவரம் தொகுதி  அஸ்தினாபுரம் பகுதியில், துணை மின்  நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  கூறியதாவது, “2022-2023ம் நிதியாண்டில் மாநிலம் முழுவதும் 100 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. பல்லாவரம் தொகுதி அஸ்தினாபுரம் பகுதியில் 33 கே.வி. புதிய துணை மின் நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்தவுடன், துணை மின்  நிலையம் அமைக்கும் பணி தொடங்கும்” என கூறினார். அப்போது இ.கருணாநிதி எம்.எல்.ஏ. பேசுகையில், “பல்லாவரத்தில் தற்போது கோட்ட பொறியாளர் அலுவலகம் இல்லை. அதை சாந்தி நகர் துணை மின் நிலையம் பகுதியில் இடம் இருப்பதால் அங்கு அமைத்து தரப்படுமா?” என்றார் இதற்கு பதிலளித்த  அமைச்சர் செந்தில் பாலாஜி, “ கடந்த ஓராண்டில் 47 புதிய துணை மின் நிலையங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட் டுள்ளது. 6.65 லட்சம் மின் நுகர்வோ ரைக் கொண்ட தாம்பரம் கோட்டம், இரண்டாக பிரிக்கப்பட்டு பல்லாவரம் மின் கோட்டம் விரைவில் உருவாக்கப் படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதை தொடங்கி வைப்பார்” என தெரிவித்தார்.