districts

img

தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு

விழுப்புரம், மார்ச் 23- தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம் வரவேற்றார், மாநில செயலாளர் பாலமுருகன், மாவட்டச் செயலாளர் சுதாகர், தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சுப்பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் பார்த்திபன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சரவணன், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் செந்தில்குமார், வரு வாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டச் செய லாளர் வேங்கடபதி, வணிக வரித்துறை பணி யாளர் சங்க மாவட்டத் தலைவர் கோவிந்த ராஜுலு, சிஐடியு மாவட்டச் செயலாளர் மூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.