districts

img

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு பொன்னேரியில் 6 மையங்களில் போராட்டம்

பொன்னேரி, ஏப். 2 - பெட்ரோலியப் பொருட்க ளின் விலை உயர்வை  கண்டித்து சனிக்கிழமை யன்று (ஏப்.2) பொன்னேரி யில்  6 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் போராட்டங் களை நடத்தியது. கிளைச் செயலாளர் சந்திரன், இலவம்பேட்டில் ஜெயராஜூ, வேண் பாக்கத்தில் பிரேம், தச்சூர் கூட்டுச் சாலையில் விஜ, ஆரணி ஏ கிளையில் தேவி, பி கிளையில் சந்தரையா ஆகியோர் தலைமை தாங்கி னர். இந்தப் போராட்டங்க ளில் கட்சியின் பகுதிச் செயலாளர் எஸ்.இ.சேகர், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் எஸ்.எம்.அனீப், டி.மதன், எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஏ.கலாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.