சென்னை,டிச.30- காகித பயன்பாட்டுக்கு பதிலாக, முக அங்கீகார தொழில்நுட்பத்தை இந்திய விமான நிலைய ஆணையம் அறிமுகப் படுத்த தொடங்கியுள்ளது. அதில் பயணிகள் தங்க ளுடைய செல்போன்களில் ‘டிஜி யாத்திரா’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண் டும். அதோடு தங்களு டைய புகைப்படம், ஆதார் அட்டை ஆகியவை களையும் பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டும். இவைகளை கொண்டு விமான நிலையத்திற்குள் நுழையும்போது, அங்கு அமைக்கப்பட்டுள்ள கருவிகளில் தங்களுடைய முக அடையாளங்களை பதிவு செய்துவிட்டு உள்ளே செல்லலாம். இந்த புதிய தொழில் நுட்பத்திற்கு ‘காகிதம் அற்ற, முக அங்கீகார முறை, விரைவு பயணத் திட்டம்’ என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த அதி நவீன புதிய திட்டம் உள்நாட்டு விமான நிலை யங்களில் மட்டுமே முதலில் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், சென்னை விமான நிலைய பயணிக ளுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. டெல்லி, பெங்களூரு, வாரணாசி ஆகிய மூன்று விமான நிலையங்களில் இம்மாத தொடக்கத்தில் செயல் பாட்டுக்கு வந்துவிட்டது. இரண்டாம் கட்டமாக புத்தாண்டில் ஐதராபாத், கொல்கத்தா, புனே, விஜய வாடா ஆகிய நான்கு விமான நிலையங்களில் வரும் மார்ச்சுக்குள் செயல்பாட் டுக்கு வர இருக்கிறது. ஆனால், இந்தியாவில் உள்ள மிக முக்கியமான விமான நிலையமான, சென்னை விமான நிலை யம், இந்த அதிநவீன தொழில்நுட்பத்தில் இது வரையில் சேர்க்கப்பட வில்லை.