districts

img

அடையாறு ஆற்றின் கீழ் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அடுத்த மாதம் பணிகள் துவக்கம்

சென்னை, டிச.18- சென்னையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2வது கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது.  இந்த திட்டத்தில் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கி.மீ தொலை வுக்கும், மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்ட ருக்கும், மாதவரம் முதல்- சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ தூரத்துக்கும் வழித்தடம் அமைய உள்ளது. இதில் உயர்மட்ட பாதை, சுரங்க பாதையில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. உயர்மட்ட பாதைக்காக தூண்கள் அமைக்கும் பணி தீவிர மாக நடைபெற்று வரு கின்றன. மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தில் 43 கி.மீ தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப் பட உள்ளது. இதில் 48 ரயில் நிலையங்கள் இடம் பெறுகின்றன.
அடையாறு ஆற்றின் கீழ் பாதை 
மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை யிலான வழித்தடத்தில் கிரீன்வேஸ் சாலை மெட்ரோ ரயில் நிலை யத்தில் இருந்து அடை யாறு சந்திப்பு மெட்ரோ ரயில் நிலையம் செல்வதற்காக அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. கிரீன்வேஸ் சாலையில் இருந்து அடையாறு ஆற்றை கடந்து அடை யாறு டெப்போ நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும் பணி ஜனவரி 15-ந்தேதி துவங்க உள்ளது. அடை யாறு ஆற்றின் கீழே சுரங்கப்பாதை அமைக்கும் இந்தப்பணி சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதற்காக ஆரம்ப கட்ட பணிகள் நடந்தது முடிந்துள்ளன. அடையாறு ஆற்றில் 40 மீட்டர் ஆழத்திற்கு துளைகள் அமைக்க மண் பரிசோதனை செய்யும் பணிகள் நிறை வடைந்துள்ளது. இதற்காக துளையிடும் ராட்சத எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.
சுரங்கப்பாதை 
தற்போது பருவமழை பெய்து வந்ததால் சுரங்கப்  பாதை தோண்டுவதற்கான பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. அடுத்த மாதம் பருவ மழை முழுவதும் ஓய்ந்து விடும் என்பதால் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை தோண்டப்படும். இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறும் போது, கிரீன்வேஸ் சாலை யில் இருந்து அடையாறு ஆற்றை கடந்து சுரங்கப் பாதை அமைக்கும் பணி அடுத்த மாதம் 15-ந் தேதி தொடங்கும். இது மாதவரம் பால்பண்ணையில் இருந்து சிறுசேரி சிப்காட் வரையிலான வழித்தடத்தின் ஒரு பகுதி யாகும். சுரங்கப்பாதை தோண்டுவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் முடிந்து உள்ளன. சுரங்கப்பாதை அமைக்கும்போது பல பாது காப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படும். அடையாறு மற்றும் திருவான்மியூரில் உள்ள நிலையங்கள், புரசைவாக்கம், நுங்கம் பாக்கம், ராயப்பேட்டை மற்றும் மந்தவெளி போன்ற இடங்களுக்கு முக்கியமான இணைப்பாக இருக்கும் என்றார்.