சென்னை, நவ.18- சென்னையில் முதல் முறையாக ‘கொரிய கண்காட்சி 2022’ கடந்த 17ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரு கிறது. ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில் கொரியாவைச் சேர்ந்த 20 நிறு வனங்கள் தங்களது தயாரிப்புகளைக் காட்சிப் படுத்தியுள்ளன. கொரியாவின் மிகச் சிறந்த நுகர்வோர் பொருள்கள், உடல் நலம் மற்றும் அழகு சாதன பொருள் கள், மின்னணு சாதனங்கள், உணவு மற்றும் குளிர்பானங்கள் உள்ளிட்ட பல பொருள்கள் பொதுமக்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினருக்காக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் செயல்பட்டு வரும் கொரிய வர்த்தக முதலீட்டு மேம்பாட்டு முகமை சென்னையில் உள்ள கொரிய தூது ரகம், கொரியா சுற்றுலா நிறுவனம், இன்கோ மையம் ஆகியவை இணைந்து இந்த கண்காட்சியை நடத்துகின்றன. கொரிய தயாரிப்புகளை பொதுமக்கள் நேரடியாக கொரிய நிறுவனங்களிடமிருந்து பெற வசதியாக இக்கண்காட்சியில் அரங்கு கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தயாரிப்பு களை அனுபவித்துப் பார்க்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. கொரிய உணவுப் பொருள்களை சுவைத்துப் பார்த்தும், அழகு சாதனப் பொருள்களை உப யோகித்துப் பார்த்தும் வாங்க வசதி செய்யப்பட்டுள்ளது.