districts

img

மரக்காணத்தில் தண்ணீரில் மிதக்கும் உப்பளம்

விழுப்புரம், நவ. 2- விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கன மழை கொட்டி வருவதால் விவசாய நிலங்களில் மழை நீர் கடல் போல் சூழ்ந்துள்ளது. இதனால் நெல், மணிலா, மரவள்ளி கிழங்கு  உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்த விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மேலும் மரக்காணத்தில் உள்ள  3500 ஏக்கர் உப்பளம் மழை நீரில் மூழ்கியது. இதனால் உப்பள உற்பத்தி நிறுத்தப்பட்டது. உற்பத்தி நிறுத்தப்பட்டதால் இதை  நம்பியிருக்கும் 5,000 தொழி லாளர்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மரக்காணம் மற்றும்  அதை சுற்றியுள்ள பகுதிகளான அனுமந்தை, கீழ்புத்துப்பட்டு, ஆலத்தூர், பிரம்மதேசம், எக்கியார்குப்பம் உள்ளிட்ட 60  கிராம மக்களும் மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மழை நீரை வெளி யேற்ற மாவட்ட நிர்வாகம் விரைந்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.