districts

சென்னை கண்காட்சியில் வீட்டு வசதி வாரிய அரங்கம்

சென்னை, ஜூலை 8 சென்னையில் நடைபெறும் ‘புரோபர்டி எக்ஸ்போ’வில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. நத்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய ‘புரோபர்டி ஃபேர் 2022’’ என்ற வீட்டுவசதி கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரி யத்தால், புதிதாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ள மனைகள், தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றை விற்பனை செய்யும் பொருட்டு திட்டங்களின் முழு விவ ரங்களை அரங்கக் கூட எண் சி18 ல் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன் படுத்தி தங்களுக்கு உகந்த மனை, தனிவீடு, அடுக்குமாடி குடியிருப்பினை தேர்வு செய்யலாம். முன் பதிவு செய்திடவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கண்காணிப்பு பொறியாளர் தெரிவித்துள்ளார்.