சென்னை, ஏப். 29 - சத்தியவாணி முத்து நகரைச் சேர்ந்த 191 குடும்பங் களுக்கு ஒரு மாதத்திற்குள் வீடு வழங்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களிடம், தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவ் உறுதி அளித்துள்ளார். சென்னை மாநகராட்சி, 59வது வட்டத்திற்கு உட் பட்டது சத்தியவாணி முத்து நகர். நீர்வழிக் கரையோ ரம் உள்ள இந்த குடியிருப்பு களை அகற்றியபோது, அங்குள்ள குடும்பங்க ளுக்கு 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரும்பாக்கத்தில் மாற்று இடம் கொடுக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த 191 குடும்பங்கள் அதே இடத்தில் இருந்து வருகின்றனர். அப்போது, கூவம், பக்கிங்காம் கால்வாய், அடையாறு கரையோரம் வசிப்பவர்களுக்கு கே.பி. பார்க் பகுதியில் கட்டப் பட்டுள்ள 1056 வீடுகளில் இவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய மார்க்சிஸ்ட் கட்சி கோரியது. அதை அரசும், அறநிலையைத்துறை அமைச்சரும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம் பாட்டு வாரியமும் ஏற்றுக் கொண்டது. மேலும், பிப்ர வரி மாதம் வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என்று வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவ் தெரிவித் தார். இருப்பினும், வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட வில்லை. இந்நிலையில் அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலா ளர் ஜி.செல்வா தலைமை யில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்கு நர் கோவிந்தராவை சந்தித்து மனு அளித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதனையடுத்து, ஒரு மாதத்திற்குள் வீடுகளை பயனாளிகள் 191 பேருக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். உதவித் தொகையை விரைந்து வழங்கப்படும் என்று மேலாண்மை இயக்குநர் தெரிவித்ததாக செய்தி யாளர்களிடம் ஜி.செல்வா தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இரா. முரளி, மாவட்ட குழு மஞ்சுளா, அருள்குமார், பகுதி குழு உறுப்பினர்கள் குமார், வடிவேலு, கிளை செயலாளர் ஆசைத்தம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.