districts

img

பூவை நகர் மக்களுக்கு பட்டா வழங்குக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருக்கழுக்குன்றம், டிச. 07- ஆயப்பாக்கம் பூவை நகர் மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக் குன்றம் வட்டத்திற்குட்பட்ட ஆயப்பாக்கம்  ஊராட்சி பூவை நகர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக 200 குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். தெருவிளக்கு, குடிதண்ணீர், வீட்டு வரி குடும்ப அட்டை,  ஆதார் அட்டை இருந்தும்  குடிமனை பட்டா இல்லாததால் குடியிருக்கும் வீடுகளுக்கு மின் இணைப்பு,  தொகுப்பு வீடுகள், இதர அரசு சலுகைகள் பெற முடியாமல் அவதி பட்டு வருகின்றனர்.  பெரும்பகுதி மக்கள் மின் இணைப்பு பெற முடியாததால் இரவு நேரங்களில் பள்ளி குழந்தைகள், படிக்க  முடியாமல் வயதானவர்கள் கர்ப்பிணி பெண் கள் பெரிதும் அவதி பட்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு உடனடியாக பூவை நகர் மக்களுக்கு குடிமனை பட்டா வழங்குவதுடன், மின் இணைப்பு வழங்கிடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தமிழ்நாடு விவசா யிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி சங்கத்தின்  சார்பில் புதனன்று (டிச 7) வட்ட செயலா ளர் எம்.குமார் தலைமையில் திருக்கழுக் குன்றம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்  சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.அரி கிருஷ்ணன்,  செயலாளர் கே.வாசுதேவன், ஆயப்பாக்கம் கிளை தலைவர் சந்திரன், விதொச வட்டத் தலைவர் கே.முரளி உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து விச மாநில துணைத் தலைவர் பி.துளசி நாராயணன் பேசினார். முன்னதாக சங்கத்தின் நிர்வாகிகள் வட்டாட்சியரை சந்தித்து கோரிக்கை மனுக் களை வழங்கினர்.