பொன்னேரி, மே 1- கொசஸ்தலை ஆற்றின் அணைக்கட்டில் அரிதாக காணப்படும் நன்னீர் இறாலை மீனவர்கள் நீரில் மூழ்கி கையால் பிடித்து மீஞ்சூர், பொன்னேரி பகுதியில் அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் கடந்த மாதம் 15 ந்தேதி தொடங்கி ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு உள்ளது. ஆழ்கடலுக்கு விசைப்படகு மீனவர்கள் செல்லாததால் மார்க்கெட்டு களில் பெரிய மீன்கள் வரத்து இல்லை. கடல் மீன்கள் விற்பனைக்கு அதிகம் வராததால் மீன் பிரியர்கள் அதிக அளவில் ஏரி, குளங்களில் உள்ள பெரிய மீன்களை வாங்கி செல்கின்ற னர். இதனால் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் ஏரி, குளம் மீன்கள் விற்பனை களை கட்டுகிறது. மீஞ்சூரை அடுத்த சீமாபுரம் கொசஸ்தலை ஆற்றின் அணைக் கட்டில் தற்போது அரிதாக காணப்படும் நீண்ட கொடுக்குடன் உள்ள நன்னீர் இறால் அதிக அள வில் காணப்படுகின்றன. இதனை மீன வர்கள் நீரில் மூழ்கி கையால் பிடித்து மீஞ்சூர், பொன்னேரி பகுதியில் அதிக அளவில் விற்பனை செய்து வரு கின்றனர். இது ஒரு கிலோ ரூ.1000 வரை விற்பனை செய்யப்படுகிறது.