செங்கல்பட்டு, செப். 3- அரசின் தடை உத்தரவை மீறி ஒழலூர் ஏரியில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுமனைப் பிரிவில் தற்போது நடைபெற்று வரும் மண் கொட்டி சமன் செய்யும் பணியை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் ஒழலூ ரில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் பாசன ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் ஒழலூரில் 400 ஏக்கர், புதுப் பாக்கம் கிராமத்தில் 250 ஏக்கர், ஒத்திவாக்கம் கிராமத்தில் 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஏரியில் உள்ள சுமார் 150 ஏக்கர் நிலம் 2005ஆம் ஆண்டு ஒரு சில தனி நபர்களால் வீட்டுமனைப் பிரிவு களாக மாற்றி விற்பனை செய்யப் பட்டன. அப்போது கிராம மக்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் உதவியுடன் போராட்டத்தில் ஈடு பட்டதால் விற்பனை நிறுத்தப்பட்டது. மேலும் 2016ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் ஏரியை அளவீடு செய்து, வீட்டுமனைப் பிரிவுகள் அமைக்கப் பட்டுள்ள நிலம் புஞ்சை நிலம் என்ப தால் விற்பனை செய்யத் தடை விதித்தது. மேலும் அந்த இடம் முழுவ தும் ஏரியின் நீர் பரப்பு (நீர்முழக்கடை) பகுதி என அறிவித்து ஆணை பிறப்பித்தது. இதனால் அந்த இடத்தில் வீட்டு மனைப் பிரிவு அமைக்க அனுமதி மறுக்கப்பட்டது.
பின்னர் வட்டாட்சி யர் தலைமையில் அங்கு அமைக் கப்பட்டிருந்த அளவு கற்கள் அகற்றப்பட்டன. ஏரிக்குள் கட்டு மானப் பணிகள் செய்யக்கூடாது என மாவட்ட வருவாய் நிர்வாகம் அறி வித்தது. இந்நிலையில் மீண்டும் சில அரசு அலுவலர்களின் உதவியோடு அந்த மனைகளுக்கு அனுமதி வழங்கியிருப்பதாக கூறப்படுகின் றது. கடந்த 2019, 20ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த மழையில் ஒழலூர் ஏரி முழுவதும் மழை நீர் தேங்கியது. இதனால் விதி முறைகளை மீறி அமைக்கப்பட்ட வீட்டு மனைப் பிரிவுகளில் 8 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியது. இந்நிலையில் மீண்டும் தற் போது ஒழலூர் ஏரியில் அமைக்கப் பட்டுள்ள வீட்டுமனைப் பிரிவுகளில் மண் கொட்டி சமன் செய்து மனை களை விற்பனை செய்ய சிலர் முயற்சித்து வருகின்றனர்.இதனை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி. மோகனன் மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்திடம் மனு அளித்தார். பின்னர் ஜி.மோகனன் செய்தி யாளர்களிடம் பேசுகையில், ஏரியில் விதிமுறைகளை மீறி கடந்த ஆண்டு களில் வீட்டுமனைப் பிரிவுகளை ஏற் படுத்தி விற்பனை செய்தனர். மழைக் காலங்களில் ஏரியில் தண்ணீர் நிரம்பி னால் வீட்டுமனைப் பிரிவு அமைக் கப்பட்டுள்ள இடத்தில் ஆள் உய ரத்திற்குத் தண்ணீர் தேங்கும்.
இதற்கெதிராக தொடர்ந்து போராட் டம் நடத்தி வருகிறோம். தற்போது உயர்நீதிமன்றம் நீர்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி யுள்ளது. அதற்குட்பட்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திமுக அரசு உடனடியாக ஏரியை பாதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2016ஆம் ஆண்டு அப் போதைய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி யர் கெஜலட்சுமி ஆய்வுக் குழு ஒன்றை அமைத்தார். அந்த குழு ஆய்வு செய்த பின் அறிக்கை சமிர்பித்தது. அதனைத் தொடர்ந்து அப்போதைய காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவ லர் சவுரிராஜன் பிறப்பித்த உத்தரவு ஆணை எண். 13395/2016 படி ஒழலூர் ஏரியில் போடப்பட்டுள்ள வீட்டு மனைப் பிரிவுகளை பதிவு செய்யத் தடை விதிக்கவும், தற்போது ஏரி யில் மண் கொட்டி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மாவட்ட ஆட்சியர் விளக்கம் வெள்ளியன்று (செப் 03) மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் தலை மையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் நடைபெற்றது. இக்கூட் டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.மோகனன் ஒழலூர் ஏரியில் அரசின் உத்தரவை மீறி மண் கொட்டுவது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்து பேசிய மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஏரியில் உட னடியாக ஆய்வு செய்யப்படும். ஆய் வுக்குப் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் விளக்கம்
வெள்ளியன்று (செப் 03) மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் தலை மையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் நடைபெற்றது. இக்கூட் டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.மோகனன் ஒழலூர் ஏரியில் அரசின் உத்தரவை மீறி மண் கொட்டுவது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்து பேசிய மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஏரியில் உட னடியாக ஆய்வு செய்யப்படும். ஆய் வுக்குப் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.