கிருஷ்ணகிரி, ஜன 23- இராயக்கோட்டை பழையூரில் அனுமதியின்றி எருதுவிடும் விழா நடத்திய 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேன்கனிக்கோட்டை வட்டம் ராயக்கோட்டை பகுதியில் உள்ள பழையூர் பகுதி யில் சனிக்கிழமை எருதுவிடும் விழா நடைபெற்றது. இவ் விழாவை அமைப்பாளர் பாலன் என்பவர் தலைமை ஏற்று நடத்தியதாகவும், அரசு அனுமதி பெறாமல் விழா நடத்தியதற்காக பாலன் உட்பட 500 பேர் மீது ராயக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.