சென்னை, பிப்.2- மூலதனப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசின் பட்ஜெட் தவறிவிட்டதாக இந்துஸ்தான் வர்த்தக சபை கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் கே. சுரேஷ் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அவசர கடன் உத்தரவாத திட்டம் தவிர மற்ற பலன்கள் சிறு குறு நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு நேரடியாக பலன் அளிக்கப்போவதில்லை. இந்த தொழில்நிறுவனங்களை பெரிதும் பாதித்து வரும் மூலதனப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்படவில்லை. எரிபொருள் விலை உயர்வால் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிக்கு பொருட்களை வாக னங்கள் மூலமாக அனுப்பும்போது அதி கரிக்கும் செலவை கட்டுப்படுத்த பட்ஜெட் தவறிவிட்டது. உள்கட்டமைப்பை மேம்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள கதி சக்தி திட்டம் நீண்ட காலத்திற்கு மட்டுமே பயன்படும். சிறுகுறுநடுத்தர தொழில் நிறுவனங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தும் வகை யில் மானியம் போன்ற உதவிகள் அளிக்கப்படுவதை போன்ற அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. உள்நாட்டில் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செய்யப்படுவது அதிகரிக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் சிறு குறு நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு இந்த பணிகள் ஒதுக்கப்படும் என்ற எதிர்ப்பார்பு நிறைவேறவில்லை. சிறுகுறு நடுத்தர தொழில்நிறுவனங்கள் தான் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உரு வாக்குகின்றன. ஆனால் அதை ஊக்கப்படுத்தும் வகையில் உறுதியான திட்டம் ஏதும் இடம்பெறவில்லை. தனி நபர் வருமான வரி க்கான வரம்புகள் அதிகரிக்கப்படாதது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. . அதிக வரி விலக்கு அல்லது விலக்கு அளிப்பதற்கான வரம்பை உயர்த்துவதன் மூலம் தனிநபர்களின் சேமிப்பை மேம்படுத்த எந்த முயற்சியும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.