விழுப்புரம், ஏப். 29- விழுப்புரம் அருகே உள்ள டி.இடையார் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் தனது மனைவியுடன் பெங்களூரு உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றார். வெள்ளிக்கிழமை காலை முருகன் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை அறிந்த அக்கம்பக்கத்தினர் முருகனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் பெங்களூரில் இருந்து திரும்பி வந்து பார்த்த போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சம், 4 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.