சென்னை,பிப்,18 மாநகராட்சி சார்பில் குப்பை யில்லா பகுதிகள் (Litter Free Corridors) என்ற திட்டத்தின்கீழ் முதற்கட்டமாக 18 சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அங்கு மாநகராட்சியின் சார்பில் குறிப்பிட்ட இடைவெளிகளில் சிறிய வகை குப்பைத் தொட்டிகள் அமைத்தல், சிறிய குப்பைத் தொட்டி யுடன் கூடிய மிதி வண்டிகளில் தூய்மைப் பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை ரோந்து பணியில் ஈடுபடுதல், சாலைகளில் குப்பைகளை கொட்டும் நபர்களின் மீது அபராதம் விதித்தல் போன்ற நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த 66 கி.மீ நீளமுடைய 18 சாலைகளில், 196 பேருந்து நிறுத்தங்கள் குப்பையில்லாமல் தூய்மையுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த 18 சாலைகளை குப்பையில்லாமல் பராமரிக்க 270 தூய்மைப் பணியாளர்கள் காலை மற்றும் மாலை என இரு வேளை களிலும் தூய்மைப்பணி மேற்கொண்டு வருகின்றனர். மேலும், 222 குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டு தூய்மைப் பணி கள் மேற்கொள்ளப்படுகிறது. 52 வாகனங்கள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறன்றன. இந்நிலையில் குப்பையில்லா பகுதிகள் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் சாலைகளில் குப்பைகளை கொட்டிய தனிநபர் மற்றும் நிறு வனங்களிடமிருந்து திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி ரூ. 39,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர் நெடுஞ்சாலை. காம ராஜ சாலை (மணலி) மாதவரத்தில் ஜி.என்.டி.சாலை, அம்பத்தூர் – செங்குன்றம் சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கத்தீட்ரல் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன்சாலை, தியாக ராயசாலை.ராஜிவ்காந்திசாலை, எலியட்ஸ் கடற்கரைசாலை உள்ளிட்டவை இதில் அடங்கும் என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது.