வண்டலூர்,ஏப்.9- சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பொதுமக்களின் பொழுது போக்கு இடமாக திகழ்கிறது. வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குள் மிருகங்களை பார்வையிட செல்லும் பொதுமக்கள், வண்டியில் சவாரியாக சென்று காட்டில் உலவும் சிங்கங்களை அருகில் இருந்தபடியே பார்ப்பது வழக்கம். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக வண்டலூர் பூங்காவில் 2021-ம் ஆண்டு சிங்கங்களை பார்ப்பதற்கான சவாரி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் வண்ட லூர் உயிரியல் பூங்காவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சிங்கம் சவாரி மீண்டும் எப்போது தொடங்கப்படும் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதையடுத்து பொது மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் உயிரியல் பூங்காவில் சிங்கம் சவாரி கோடை விடுமுறையின் போது தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கோடை விடுமுறைதான் வண்டலூர் உயிரியல் பூங்காவின் முக்கியமான சுற்றுலா சீசன் ஆகும். எனவே சிங்கம் சவாரியை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.