districts

கூட்டுறவு மேலாண்மை பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம், ஜூலை 27- விழுப்புரம் மாவட்டத் தில் கூட்டுறவு மேலாண்மை பட்டய படிப்புக்கு விண்ணப் பம் விநியோகம் செய்யப் படுவதாக  கூட்டுறவு சங்கங்க ளின் மண்டல இணைப்பதி வாளர் யசோதா தேவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 2022-23ஆம் ஆண்டுக் கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை, கணினி மேலாண்மை, நகை மதிப்பீடும் அதன் தொழில்நுட்பங்களும் ஆகிய 3 சான்றிதழ்களுடன் கூடிய கூட்டுறவு மேலா ண்மை பட்டய பயிற்சிக்கு பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பயிற்சிக்கான விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலைய அலுவலகத்தில் 100 ரூபாய்  செலுத்தி நேரில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி  செய்யப்பட்ட விண்ணப் பங்கள் 1.8.2022 மாலை 5.30 மணிக்குள் கிடைக்குமாறு கொரியர் மற்றும் பதிவு  தபால் மூலமாக மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும். 12ஆம் வகுப்பு தேர்ச்சி  பெற்றவர்கள், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்த ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சி  காலம் ஒரு வருடம், கட்ட ணம் ரூ.18,850 ஆகும். மேலும் விவரங்களுக்கு விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையம்,  2/1006 எல்லீஸ்சத்திரம் சாலை, திருச்சி மெயின் ரோடு, வழுதரெட்டி, விழுப்பு ரம் என்ற முகவரியில் அல்லது 04146-259467 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.