districts

img

40ஆண்டுகளுக்கு பின்  முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 திருத்தணி, ஏப்.9 - திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகையில்  பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் கடந்த 1984ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஞாயிறன்று  சந்தித்தனர். கே.ஜி.கண்டிகை அரசு  மேல்நிலைப்பள்ளியில் 1984ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் பள்ளியில் திரண்டனர். ஒரே அறையில் பயின்று, மைதானத்தில் ஒன்றாக விளையாடிய முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதனை  தொடர்ந்து ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.