விழுப்புரம்,நவ.6- அடிப்படை வசதியின்றி துர்நாற்றம் வீசும் நிலையமாக மாறிவிட்டது விழுப்புரம் பழைய பேருந்து நிலையம். நகரத்தின் விழுப்புரம்- புதுச்சேரி மார்க்கத்தில் பழைய பேருந்து நிலையம் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது, இன்ன மும் செயல்பாட்டில் இருந்து வருகிறது. ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக இருந்து, விழுப்புரம் மாவட்ட மாக பிரிக்கப்பட்டது. அதனால் விழுப்புரம் மாவட்டத் தலை நகராக தரம் உயர்த்தப்பட்டது. அதனடிப்படையில் நகரத் தின் அருகில் வழுதரெட்டி பகுதியில் அப்போது சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் புதிய பேருந்து நிலையம் கடந்த 2000 ஆம் ஆண்டு கட்டப் பட்டது. அதனால் நகரம் கொஞ் சம் கொஞ்சமாக வளர்ந்து, அதனால் இந்த பழைய பேருந்து நிலையத்திற்கு நகர பேருந்துகள் மட்டுமே வந்து செல்லும் நிலைக்கு பழைய பேருந்து நிலையம் தள்ளப்பட்டது.குறிப்பாக பில்லூர், தளவானூர், பிடாகம், பெரும்பாக்கம், காணை, கோலியனூர், வளவனூர், அனந்தபுரம், அரசூர், திரு வெண்ணெய்நல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப் புறங்களுக்கு செல்லக்கூடிய அரசு நகரப் பேருந்துகள் மட்டும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த பேருந்து நிலையத்தில் எந்நேரமும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு பழைய பேருந்து நிலையத்தை நகராட்சி கண்டு கொள்ளாமல், அப்பகுதியை பல்வேறு பணிகளுக்கு பயன் படுத்தி வருகிறது.
இந்த பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வது சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த வர்கள்தான் அதிகம். இங்கிருந்த பழைய கட்டிடங் கள் அனைத்து இடித்து அப் புறப்படுத்தி வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், கிராமங்களில் இருந்து வரும் பயணிகளின் தேவையான குடி நீர் வசதிகூட செய்து தரப்பட வில்லை. இங்கு கட்டண கழி வறை இருந்தபோதிலும் இலவச கழிவறை, சிறுநீர் கழிக்கும் இடம் இல்லாததால் பயணிகள், அவசரத்திற்கு பேருந்து நிலையத்திலேயே சிறுநீர் கழித்து வருவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பையில் உரம் தயாரிப்ப தாக கூறிக்கொண்டு, நகரின் பல்வேறு குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்களில் சேரும் குப்பைகளை மூட்டைக ளாக கொண்டு வந்து குவியல், குவியலாக இந்த பேருந்து நிலையத்திற்குள் கொட்டுகின் றனர். நாள்தோறும் கொட்டுவ தால் மலைபோல் குவிந்துக் கிடக்கிறது. பேருந்து நிலைய வளாகத்திற்குள் உள்ள கழிவுநீர் வாய்க்கால் அருகி லேயே குப்பை மூட்டைகளை குவித்து விடுகின்றனர். இத னால் தண்ணீர் செல்ல வழியின்றி தேங்கி கொசு உற்பத்தி மையமாகமாறி விட்டது. மணிக்கணக்கில் பேருந்துக ளுக்காக காத்திருக்கும் பயணி களுக்கு நிழற்குடை வசதியும் போதுமானதாக இல்லாமல் தினமும் பயணிகள் படும் அவ திக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.