சென்னை,பிப்.27- இந்தியாவில் முதல் முறையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஞாயி றன்று முதல் அமைதியான ரயில் நிலையமாக மாறியுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 150 ஆண்டுகள் பழமையான ரயில் நிலை யம் ஆகும். இங்கிருந்து தமிழகத்தின் பிற பகுதிகள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தில்லி உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 46 ஜோடி ரயில்கள் உள்பட 200 எக்ஸ்பிரஸ் ரயில்களை சென்ட்ரல் ரயில் நிலையம் கையாளுகிறது. தினமும் சராசரியாக 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் பயணம் செய்கின்ற னர். ரயில் நிலையத்துக்கு வரும் பயணி களின் வசதிக்காக புறப்படும் ரயில்களின் எண்., சேரும் இடம், புறப்படும் நேரம் மற்றும் நடைமேடை எண் போன்ற தகவல்கள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வந்தது.
அதேபோல் வெளியூர்களில் இருந்து வரும் ரயில்கள், புறப்பட்ட ஊர், ரயில் எண், வந்து சேரும் நேரம் மற்றும் நடைமேடை எண் போன்ற விவரங்களும் ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. ஈரோட்டை சேர்ந்த டப்பிங் கலைஞரும், கல்லூரி விரிவுரையாள ருமான கவிதா முருகேசன் தமிழ் அறிவிப்பு களுக்கு குரல் கொடுத்து வந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை `அமைதியான ரயில் நிலையம்’ என்று அறிவித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் வெளியிட்டுள்ள உத்தரவில், “சென்ட்ரல் ரயில் நிலையம் அமைதியான ரயில் நிலையமாக மாறுவ தால் இனி ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்படாது. அதற்கு பதிலாக, ரயில்கள் புறப்பாடு, வருகை, ரயில் எண், நடைமேடை போன்ற விவரங்கள் டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பப்படும். எனவே அனைத்து டிஜிட்டல் தகவல் பலகைகளும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். பயணிகளின் வசதிக்காக தகவல் மையங்களில் போதுமான ஊழியர்களை அதிகாரிகள் நியமிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். அதன்படி சென்ட்ரல் ரயில் நிலையம் ஞாயிறு(பிப்.26) முதல் அமைதியான ரயில் நிலையமாக மாறியது. ஆனால் சில பயணிகள் கூறுகையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒலிபெருக்கி அறிவிப்பு இல்லாதது கடைசி நேரத்தில் வரும் பயணி கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. ரயில் பயணிகளை விமான பயணிகளுடன் ஒப்பிட முடியாது என்றனர்.