சென்னை, ஜூலை 17 - வடசென்னை மற்றும் வல்லூர் அனல் மின் நிலையங்க ளில் கொதிகலன் பழுது ஏற்பட்டு 710 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. வடசென்னை அனல் மின் நிலைய 1-வது நிலையின் 2-வது அலகில் கொதிகலன் கசிவு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தியும், வல்லூர் அனல் மின் நிலைய 2-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.