அரியலூர், மார்ச் 2 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி ரியை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் இரவு முழுவதும் தங்கியிருந்து வழிபாடு செய்தனர். கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமம் சார்பில் பொறியாளர் கோமகன் முயற்சியில், செவ்வாயன்று இரவு முழுவதும், பக்தர்களுக்காக பரதநாட்டிய பள்ளி குழுவினரின் தனிநபர் மற்றும் குழு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிகளுக்கு கங்கைகொண்ட சோழ புரம் மேம்பாட்டு குழுமம், நாட்டியாஞ்சலி குழு வினர் ஏற்பாட்டில் சென்னை ராஜலட்சுமி கல்வி நிறுவன உதவியுடன் தமிழக இந்து சமய அறநிலையத் துறை மூலம் 7 ஆம் ஆண்டாக நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. மகா சிவராத்திரியை முன்னிட்டு நடந்த நாட்டி யாஞ்சலி நிகழ்ச்சியில், கேரள மாநிலம் திரு வனந்தபும், பெங்களூர், மைசூர், சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து, நாட்டியப் பள்ளி கலைஞர்களும், தஞ்சாவூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப் பள்ளி மாணவிகள் நடனமாடினர்.