அரியலூர், அக்.27- அரியலூர் மற்றும் ஜெயங்கொண் டம் பகுதி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, குடிமனைப்பட்டா வழங்க கோரி பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்டோ பர் 18-ஆம் தேதி அரியலூரில் ஒன்றியச் செயலாளர் துரை அருணன் தலைமை யிலும், ஜெயங்கொண்டத்தில் ஒன்றி யச் செயலாளர் எம்.வெங்கடாசலம் தலைமையிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரதப் போராட்டத்தில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதியில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை அரியலூர் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோ வன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதியிடம் வழங்கப் பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் துரை.அருணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், எ. கந்தசாமி, டி.அம்பிகா, செந்துறை வட்டச் செயலாளர் கு.அர்ச்சுணன், தா.பழூர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஆண்டிமடம் வட்ட செயலாளர் வி.பரம சிவம், ஒன்றிய குழு கோவிந்தராசு, சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், அரியலூர், திருமானூர், செந்துறை ஒன்றியங்களில் உள்ள வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு குடிமனைப்பட்டாவும், இலவச வீட்டு மனையும் வழங்கிட வேண்டும். அரசு தரிசு புறம்போக்கு மடம், கோவிலுக்கு சொந்தமான இடங்களை வகை மாற்றம் செய்து பட்டா வழங்க தமி ழக அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும், ஏழை எளிய மக்களுக்கு போர்க் கால அடிப்படையில் பட்டா வழங்கி, வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆண்டிமடம் வட்டம் அழகாபுரம் கிராமத்தில் செல்லும் உயர் மின்ன ழுத்த கம்பியை அப்புறப்படுத்தவும், கொக்கரனை கிராம மக்களுக்கு மாற்று இடம் கொடுத்தவர்களுக்கு மின் இணைப்பு வழங்கிடவும், வீர சோழபுரம் தலித் மக்களுக்கு வீட்டு மனை பட்டாவை எடுத்துக் கொடுத்திட வும், நகர்ப்புறங்களில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட் டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை செய்து கோரிக்கைகளை நிறை வேற்றி தருவதாக உறுதி அளித்தார்.