districts

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்

அரியலூர், ஜூன் 8- அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே  கோயில் எசனை ஊராட்சிக்கு உட்பட்ட விளாகம் கிராமம் தெற்கு தெருவில் ஆக்கிர மிப்புகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட் டிற்கு கொண்டு வரவும், அடிப்படை வசதி கள் செய்திட கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஒன்றியச் செயலாளர் புனிதன் தலைமை  வகித்தார். மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கோயில் எசனை ஊராட்சி விளாகம் கிரா மத்தில் சர்வே எண் 140-350-ல் மக்கள் நட மாடும் கிராம சாலையில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்ற வேண்டும். நீண்ட கால மாக ஆக்கிரமிப்பை அகற்ற கோரி, மாவட்ட  ஆட்சியர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் கிராம சபை கூட்டங்களில் மனு கொடுத்தும் ஆக்கிர மிப்பை அகற்றாமல் இருக்கும் அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வீதியில் ஓடும் சாக்கடையை அப்புறப்படுத்தி, இருபுறமும் வடிகால் வசதி  செய்து கொடுக்க வேண்டும். அனைத்து வார்டுகளிலும் பாகுபாடின்றி நூறு நாள் வேலை வழங்க வேண்டும். விளாகம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் குடிநீர் வசதி கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல வரப்பன்குறிச்சி கிராமம் சர்வே எண்.2/18.02885  - 1 /14.0495 வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். கீழராமநல்லூர் ஏழை, எளிய மக்க ளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க  வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகள் ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டன.