districts

img

சிபிஎம் சிறப்பு பேரவை

அரியலூர், மே.22 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு தீர்மான விளக்க பேரவைக் கூட்டம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், அரியலூர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கை நெசவு தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.என்.துரைராஜ் நன்றி கூறினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், கே.மகாராஜன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பத்மாவதி, மீனா, ஒன்றியச் செயலாளர்கள் ஆண்டிமடம் வி.பரமசிவம், தா.பழூர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.  முன்னதாக மறைந்த மாநில செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் பத்திரிகை முதன்மை பொது மேலாளருமான எம்.என்.எஸ்.வெங்கட்டராமனின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.