districts

பிரதமர் நிதியை வழங்க மறுத்த இந்தியன் வங்கி

அரியலூர், பிப்.6- அரியலூர் மாவட்டம் தா.பழூரில் ஒன்றிய அரசால் வழங்கப்படும் விவசாயி களுக்கான ரூ.6000 தொகையை வங்கி யில் உள்ள கடனை கணக்கில் காண் பித்து வழங்காமல் மறுத்த இந்தியன் வங்கியை கண்டித்து அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஐஎம்எல் மாவட்டச் செயலாளர் கருணாகரன் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மாநில செயலாளர் குணாளன், மாநில குழு உறுப்பினர் சுந்தர விநாயகம் கண்டன உரையாற்றினர்.  ஆர்ப்பாட்டத்தில் விவசாயி களுக்காக வழங்கப்படும் பிரதமர் நிதி ரூ.6000-ஐ, கடன் பாக்கியை காரணம் காட்டி தடுக்காமல் உடனே வழங்க வேண்டும். சட்டப்படியான வசூல் முறை களை புறக்கணித்துவிட்டு, கடன் பாக்கி யை தனியார் அடியாட்கள் மூலம் அடா வடி வசூல் செய்யக் கூடாது உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.