அரியலூர், மார்ச்.10- ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்தும், 12 அம்ச கோயரிக்கைகளை முன் வைத்து மார்ச் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் அனைத்து தொழிற் சங்கம் சார்பில் இந்திய அளவில் பொது வேலை நிறுத்தம் நடைபெற வுள்ளது. இதற்கான ஆயத்த மாநாடு அரியலூர் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. இதில் மாவட்ட அளவில் உள்ள அனை த்து தொழிற்சங்க நிர்வாகிகளும் வேலை நிறுத்ததில் பங்கேற்று தங்களது எதிர்ப்பை காட்ட வேண்டும் என வலியுறுத்தபட்டது. இதில், சிஐடியு மாவட்டச் செயலா ளர் துரைசாமி, ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் தண்டபாணி, எல்பிஎப் மாவட்ட கவுன்சில் தலைவர் மகேந்தி ரன், ஐஎன்டியுசி மாவட்டச் செயலா ளர் விஜயகுமார் ஆகியோர் தலை மையில் நடைபெற்றது. ஏஐடியுசி மாநில செயலாளர் மூர்த்தி, சிஐடியு மாவட்ட தலைவர் அகஸ்டின் ஆகி யோர் சிறப்புரையாற்றினார். இதில் ஏஐடியுசி, எல்பிஎப், சிஐடியு, ஐஎன்டி யுசி, ஹெச்எம்எஸ் உள்ளிட்ட தொ ழிற்சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.