அரியலூர், பிப்.2- தனியார் கட்டுமான நிறுவனம் தனது வாடிக்கையாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தர விட்டுள்ளது. சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் மனோகரன். இவர், கடந்த 2012-ஆம் ஆண்டு வண்டலூர் அருகே அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்க தனியார் கட்டுமான நிறு வனத்திடம் ரூ.6.44 லட்சம் முன்பணமும், தவணை முறையில் ரூ.22 லட்சமும் செலுத்தியுள்ளார். ஆனால், வீட்டைக் கொடுக்காமல், மேலும் கூடுதலாக ரூ.2.60 லட்சம் செலுத்த வேண்டும் எனவும், கூடுதல் தொகை செலுத்த தவறினால் வாரம் ஒன்றுக்கு ரூ.25,000 அபராதமாக விதிக்கப்படும் எனவும் தனியார் கட்டுமான நிறுவனம் கூறியுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த மனோகரன் கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கட்டுமான நிறுவனம் மீது வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக் காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் அரிய லூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது. இதனிடையே, மனோகரன் இறந்து விட்டதால், அவரது மனைவி சுதா (45) வழக்கைத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் வீ.ராமராஜ் தலைமையிலான அமர்வு, முழு தொகையைப் பெற்றுக் கொண்டு ஒப்பந்தத்தை விடக் கூடுதலாகப் பணம் கொடுத்தால்தான் வீட்டைத் தரமுடியும் எனக் கட்டுமான நிறுவனம் வற்புறுத்தியது நியாயமற்ற வர்த்தக நடைமுறை. மேலும், வீடு வழங்க 8 ஆண்டுகள் காலதாமதம் செய்தது சேவை குறைபாடு. எனவே, தனியார் கட்டுமான நிறுவனம், 4 வாரத்துக்குள் சுதாவிடம் வீட்டையும், இழப்பீடாக ரூ.5 லட்சத்தையும் வழங்க வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.