செங்கல்பட்டு, பிப். 5 செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் குமார் (வயது 33) இவர் சுயஉதவி குழுவை சேர்ந்த பெண்களின் ஆதார்எண் மற்றும் வங்கிக்கணக்கை பயன்படுத்தி அவர்களது பெயரில் தலா ரூ.40 ஆயிரம் வீதம் 33 பேரின் வங்கிகணக்கில் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பணபரிவர்த்தனை செய்துள்ளார். இவ்வாறு 33 பேரிடம் தலா ரூ.40 ஆயிரம் வீதம் ரூ.13 லட்சத்து 20 ஆயிரம் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து மகளிர் அளித்த புகாரின் பேரில் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.