districts

இளம் பெண் மரணத்திற்கு நீதி வேண்டும் மாதர் சங்கம் கோரிக்கை

செங்கல்பட்டு, பிப்.7- இளம் பெண் சுபா மரணத்திற்கு நீதி வழங்கிட வேண்டும்,  குற்றவாளியாக கருதப்படும் கணவனையும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்களையும் கைது செய்து விசாரணை நடத்திட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம்,  புதுப்பட்டினம், மீனவர் பகுதி  குடியிருப்பை சேர்ந்த நாயகம் என்பவர் மகன் பவுன்ராஜ் என்பவர் செய்யூர் வட்டம், கானத்தூர் அங்காளம்மன் குப்பத்தை சேர்ந்த மறைந்த முத்து என்ப வரின் இளைய மகள் சுபா  என்பவரை கடந்த 6 வருடங்க ளுக்கு முன்பு திருமணம் செய்தார். தந்தையை இழந்த சுபாவிற்கு புஷ்ப காந்தி வயது 70 என்ற அம்மா வும், கலைவாணி என்கிற  மாற்றுத்திறனாளி அக்கா வும் உள்ளனர். சுபாவை பவுன்ராஜூவுக்கு திருமணம் செய்து கொடுக்கும் போது 19 சவரன் நகை, 60 ஆயிரம்  ரொக்க பணம் மற்றும் சீர்வரி சைகளை அளித்தனர்.   திருமணத்திற்கு பிறகு இது எல்லாம் பத்தாது என்று சொல்லி பவுன்ராஜ் தனது மனைவி சுபாவிடம் இருசக்கர வாகனம் வாங் கித் தரவேண்டும் என்று  அடிக்கடி சண்டையிட் டுள்ளார். மேலும் சுபா வீட்டார் போட்ட 19 சவரன் நகை முழுவதையும் விற்று  செலவழித்து விட்டு மேலும்  நகை, பணம் போன்ற வற்றை உன் அம்மா, வீட்டில்  இருந்து வாங்கி வா என்று அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது.  அடிக்கடி இப்படி  அவர் தொந்தரவு செய்துள்ளார்.

வயதான அம்மா, திருமணம் ஆகாத மாற்றுத் திறனாளி அக்காவிடம் சொல்லி சுபா அழுது புலம்பி  உள்ளார். மேலும் மாமி யார் வீட்டுக்கு போய் சண்டை போட்டு அவர்கள்  வீட்டில் உள்ள தொலைக் காட்சி பெட்டி, மற்றும் வீட்டு  பொருட்களையும் பவுன் ராஜ்  உடைத்துள்ளார்.  கடந்த 6 வருடங்களாக சண்டைகளுக்கு இடையே குடும்பம் நடத்தியுள்ளார் சுபா. இந்நிலையில் கடந்த  பிப்ரவரி 1ம் தேதியன்று  சுபாவை அடித்து படு கொலை செய்யப்பட்டார். இத்தகவல் சுபாவின் அம்மா,  அக்கா மற்றும் உறவினர் கள் மூலம் மாதர் சங்கத் திற்கு தகவல் தெரியவந்த நிலையில் சுபாவின் கொலையை கணவர் பவுன் ராஜ் மற்றும்  அவரது அக்கா,  அம்மா, போன்ற உறவி னர்களும் மூடிமறைத்தது தெரியவந்தது.  எனவே சுபாவை படுகொலை செய்த கணவர் பவுன்ராஜ் யும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்களையும் கைது  செய்து உரிய விசாரணை வழங்கிடுமாறு அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் காவல்துறையை கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கலையரசி, மாவட்டச் செயலாளர். ஜி.ஜெயந்தி, மாவட்டக் குழு உறுப்பினர்கள். கே. வனிதா, எஸ். குர்ஷித், இ.பார்வதி, எம்.ஜெய லட்சுமி மற்றும் மறைந்த சுபாவின் உறவினர்கள்  மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் செங்கல்பட்டு உதவி கண்காணிப்பாளர் ஆகி யோரை சந்தித்து மனு அளித்தனர்.