districts

img

திரு.வி.க நகர் மக்களுக்கு மாற்றுஇடம் மாவட்டச் செயலாளர் பாரதி அண்ணா வலியுறுத்தல்

செங்கல்பட்டு, மார்ச்15- மதுராந்தகம் நகராட்சி 12ஆவது வார்டில் உள்ள திருவிக நகர் மக்களுக்கு நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் குடியிருப்புடன் கூடிய மாற்று இடம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி மாவட்ட ச்செயலாளர் ப.சு.பாரதி அண்ணா வலியுறுத்தி யுள்ளார்.  கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய அவர், மதுராந்தகம் வார்டு 12 திருவிக நகரில் படிவம் 6 வருவாய்த்துறை சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது. நீர்நிலை பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு சட்டத்தின் படி படிவம் 6 வழங்கப்பட்டி ருந்தால் அது தற்காலிக மாக ஆக்கிரமிப்பு செய்த வர்களுக்கு மட்டுமே பொருந் தும் என்றார். இப்பகுதி  மக்கள் 3 தலைமுறைகளுக்கு மேலாக வசித்து வருகின்றர். மின் இணைப்பு, வீட்டுவரி உள்ளிட்ட அனைத்தை வரிக ளும் செலுத்தி வருகின்றனர். படிவம் 6 வழங்கிய அரசு நிர்வாகத்திற்கு மாற்று இடம் வழங்கிவிட்ட பின்னர் தான் படிவம் 6 அல்லது 7 வழங்க வேண்டும் என்பது  தெரியவில்லையா? தற்போது வரை நகராட்சி நிர்வாகம் மாற்று இடம் தருவதற்கு தீர்மானம் இயற்ற வில்லை. மாற்று ஏற்பாடுகளை செய்யாமல் திருவிக நகர் மக்களை  வெளியேற்ற முயற்சிப்பது மன உளைச்சலை ஏற்படுத்தி யுள்ளது என்றார்.மாற்று இடத்தை நகராட்சி எல்லைக்குள் ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த ஆர்ப்பட்டத்தில் மதுராந்தகம் வட்டச் செய லாளர் எஸ்.ரவி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.புருசோத்தமன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.மாசிலாமணி ஆகியோர் பங்கேற்றனர்.