districts

img

ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கிராமங்கள் தோறும் துண்டுப் பிரசுரம்

செங்கல்பட்டு, டிச. 22- மக்கள் விரோத பாஜக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கிராமங்கள் தோறும் லட்சக்கணக்கான துண்டு பிரசுரங்களை விநியோகிப்பது என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தீர்மானித்துள்ளது.

முன்னணியின் தமிழ் மாநிலக்குழு கூட்டம் புதனன்று (டிச.20) செங்கல் பட்டில் மாநிலத் தலைவர் செல்லக் கண்ணு தலைமையில் நடைபெற்றது. முன்னணியின் மாநில சிறப்புத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், மாநில  துணைத் தலைவர் கே.சாமிநாதன், மாநில துணைப் பொதுச்செயலாளர் பி.சுகந்தி, செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் இ.சங்கர், மாவட்டச் செய லாளர் க.புருஷோத்தமன், மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் உள்ளிட்ட மாநில குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சாதி, மத வெறியை வளர்த்தெடுக்கும் பாசிச பாஜக வையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் வரும் 2024  நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணிக்கும் வகையில் தமிழகத் தில் உள்ள  அனைத்து முற்போக்கு இயக்கங்களையும், தலித் உரிமை இயக்கங்களையும் ஒன்றிணைத்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் சார்பில் தமிழக  கிராமங்கள் மற்றும் நகரங்கள் முழுவதும் லட்சக்கணக்கான துண்டு பிரசுரங் களை விநியோகித்து பிரச்சாரம் செய்வது என தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டது.