செங்கல்பட்டு, பிப்.20 - நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் சேரும் இருளர் பழங்குடியின மாணவியின் வீட்டிற்கு சென்று மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகி கள் வாழ்த்து தெரிவித்தனர். செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் இருளர் பழங்குடியின பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர் கூலி வேலை மற்றும் திருவிழாக்காலங்களில் கரகம் அலங்காரம் செய்து தருவது உள்ளிட்ட கிடைக்கும் வேலைகளை செய்து தன்னுடைய குடும்பத்தை நடத்தி வந்தார். தொடர்ந்து குடும்பம் வறுமை யான நிலையில் இருந்தாலும் குழந்தை களை படிக்க வைத்தால் மட்டுமே முன்னேற்ற முடியும் என வைராக் கியத்துடன் படிக்கவைத்தார். தொடர் வறுமைக்கு இடையில், தனது இரண்டு பெண் குழந்தைகளை யும் தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். மகன் கார்த்திக்கை மட்டும் அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு பார்த்த சாரதியின் முதல் மகள் பூஜா பிளஸ் டூ தேர்வில் 963 மதிப்பெண் பெற்றார். சிறு வயதிலிருந்தே மாணவி பூஜா மருத் துவராக வேண்டும் என விரும்பினார். இதனை தொடர்ந்து பூஜா நீட் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி அடைந்த போதிலும் தந்தை பார்த்தசாரதி அளித்த ஊக்கத்தால் நீட் தேர்வை மீண்டும் எதிர்கொண்டார்.
இந்நிலையில் கூலி வேலை செய்து வந்த பார்த்தசாரதி உடல்நிலை குறைவால் கடந்த ஆண்டு உயிரிழந்ததை தொடர்ந்து, குடும்பம் மிகப்பெரிய வறுமையில் சிக்கியது. படித்தால் மட்டுமே தனது குடும்பம் அடுத்த நிலைக்குப் போகும் என்பதை உணர்ந்த பூஜா, மீண்டும் நீட் தேர்வு எழுதி, 276 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். இந்த முறை பூஜாவிற்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. தனி யார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், வறுமையின் காரணத்தி னால் கல்லூரியில் சேர முடியாமல் இருந்துள்ளார். இருந்தும் விடாப்பிடி யாக படித்து வந்த பூஜா மூன்றாவது முறையாக இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில், 334 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். வெற்றி பெற்ற பூஜாவிற்கு இந்தாண்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்து வக் கல்லூரியில் மருத்துவம் படிப்ப தற்கு இடம் கிடைத்துள்ளது. தந்தை யின் மரணம், தாய்க்கு முறையாக வேலை இல்லாதது உள்ளிட்ட காரணங் களால், அரசு மருத்துவக் கல்லூரிக்கு, கட்ட வேண்டிய பணம் கூட கட்ட முடி யாத சூழலில் பூஜா தவித்து வந்துள் ளார். இந்நிலையில் இவரது நிலை குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அ.ரா.ராகுல்நாத் அறிந்து உடனடி யாக மாணவியின் கல்விக்கு உதவ முன்வந்தார். தொண்டு நிறுவன அமைப்பை தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட மாணவிக்கு அனைத்து வித உதவிகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சென்னையை சேர்ந்த சைல்ட் லைஃப் என்ற தொண்டு நிறுவனம், மாணவியின் இந்த ஆண்டிற்கான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டு, தேவையான பணத்தை செலுத்தியுள்ளது. மாணவிக்கு உடனடி யாக உதவி செய்த மாவட்ட ஆட்சி யருக்கு மாணவி பூஜா நன்றி தெரி வித்துக்கொண்டார். இது குறித்து மாணவி பூஜா கூறுகை யில், “மூன்று முறை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கிறேன். நான் தொடர்ந்து முயற்சி செய்வதற்கு என் தந்தை மற்றும் தாய் உறுதுணையாக இருந்தார்கள். உன்னால் படிக்க முடியும் நீ நிச்சயம் படிப்பாய், என அப்பா தொடர்ந்து ஊக்கமளித்து வந்தார். நான் இப்பொழுது மருத்து வக்கல்லூரியில் சேரும்போது, என்னுடன் அப்பா இல்லாமலிருப்பது மன வருத்தம் அளிக்கிறது’’ என கண்ணீருடன் தெரிவித்தார். இந்நிலையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டத் தலை வர் முருகேசன், மாவட்ட செயலாளர் அழகேசேன் மார்க்சிஸ்ட் கட்சியின் காட்டாங்கொளத்தூர் பகுதி செயலாளர் குணசேகரன் ஆகியோர் ஞாயிறன்று (பிப்.20) மாணவி பூஜாவின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து நினைவு பரிசை வழங்கினர். மேலும் மாணவி பூஜாவின் தொடர் படிப்புக்கு தேவையான உதவிகளை செய்திட தயாராக இருப்பதாகவும் தெரிவித்த னர். - க.பார்த்திபன்