districts

img

இன்சூரன்ஸ் ஊழியர்கள் கூட்டமைப்பு தென் மண்டல மாநாடு: இலட்சினை வெளியீடு

வேலூர் மார்ச் 18 - வேலரில் நடைபெறவிருக்கும் இன்சூ ரன்ஸ் ஊழிர்கள் கூட்டமைப்பு தென் மண்டல மாநாட்டின் இலட்சியனை வர வேற்புக்குழுத் தலைவரும் மேயருமான சுஜாதா வெளியிட்டார். தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்ட மைப்பின் 35வது பொது மாநாடு 2022 ஆகஸ்ட் 13,14,15 ஆகிய தேதிகளில் வேலூரில் நடைபெற உள்ளது. இதற்கான வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் வேலூ ரில் கோட்டத் தலைவர் எஸ்.பழனிராஜ் தலை மையில் நடைபெற்றது. கோட்ட பொது செயலாளர் எஸ்.ராமன் வரவேற்றார். தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்ட மைப்பின் பொதுச் செயலாளர் டி.செந்தில்குமார் மாநாடு குறித்த பேசினார். தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்ட மைப்பின் தலைவர் பி.பி.கிருஷ்ணன், கோழிக்கோடு கோட்ட பொதுச் செயலாளர் ஐ.கே.பிஜூ ஆகியோரும் இந்த கூட்டத்தில் உரையாற்றினர். வேலூர் மாநகர தொழிற்சங்க கூட்ட மைப்பினர் அமைப்பாளர் சி.ஞானசேகரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், எல்ஐசி முகவர்கள் சங்க கோட்ட பொதுச் செயலாளர் தா.வெங்கடேசன் உள்ளிட்டோரும் பேசினர். மாநாட்டு வரவேற்புக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் மாநாட்டு இலச்சினையை வெளியிட்டு சிறப்பு ரையாற்றினார்.  வரவேற்புக் குழு செயலாளராக கோட்ட பொதுச் செயலாளர் எஸ்.ராமன், பொருளாளராக செந்தில் வேலன் மற்றும் 25 துணைத் தலைவர்கள், 25 இணைச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.