districts

img

வேலூர் கோட்டை அகழியை சுற்றிலும் ராட்சத விளக்குகள்

வேலூர், மே 10- வேலூர் கோட்டை 113 ஏக்கர் பரப்பள வில் அகண்டு விரிந்து பல்வேறு வர லாற்றுச் சின்னங்களை தன்னகத்தே கொண்டு ள்ளது. கோட்டையை பார்வையிட வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணி கள் வந்து செல்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன் வேலூர் ஆட்சி யராக இருந்த அஜய் யாதவ் கோட் டையை சுற்றிலும் விஜயநகர பேரரசு காலத்தை விளக்கும் வகையில் கோட்டை கொத்தளங்களில் அந்தகால சிப்பாய்கள் காவல் காப்பது போன்ற பொம்மைகளை நிறுவி, அதை நோக்கி கோட்டை அகழி கரையில் ஸ்பாட் லைட்டுகளை அமைத்தார். இதனால் கோட்டை இரவு நேரத்தில் ஜொலி த்தது. இதற்காக காற்றிலிருந்து மின்சாரம் எடுக்க தனி ஏற்பாடுகளும் அமைக்கப்பட்டது. அப்போது இதுபரபரப்பாக பேசப்பட்டது. கோட்டையும் வண்ண விளக்குகளால் இரவு  நேரத்தில் ஜொலித்தது. பலருடைய பாராட்டையும் பெற்றது. பின்னர் வழக்கம் போல் முறையான பராமரிப்பு இல்லாததால் அன்று வைக்கப்பட்ட பொம்மைகள் காற்று, மழையில் சிதைந்து போனது. இந்நிலையில் வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலூரை அழ காக்கும் பணிகள் தொடங்கியது. அதில் வேலூர் கோட்டையின் உட்பகுதியில் மார்பிள் நடைபாதைகள், அந்த காலத்து விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளது. இதனால் கோட்டை உட்பகுதிகள் அழகு பெற்றது. அதேபோல் ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்ட கட்டடங்கள் ஆட்கள் இல்லாமல் சிதைந்து போய் கிடக்கிறது. இதையும் மராமத்து பார்க்க ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டிருக்கிறார். அந்த பணிகளும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கோட்டையின் வெளிப்புற அழகை மக்கள் எளிதாக இரவிலும் கண்டு களிக்க வசதியாக கோட்டையை சுற்றி, அகழிக்கரைகளில் இருந்து ஒளிரும் வகையில் வண்ண விளக்குகள் அமைக்கும் பணிகள் இப்போது தொடங்கி யிருக்கிறது. இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக அகழிக்கரை களில் கோட்டையை சுற்றிலும் 94 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு தூண்கள் அமைத்து அதிகளவு ஒளி தரும் எல்இடி விளக்குகள் அமைக்கப்படுகிறது. இதனால், இரவு நேரத்திலும் கோட்டையை அழகாக கண்டுகளிக்கலாம். இப்பணிகள் ஓரிரு மாதங்களில் முடியும் என அதிகாரிகள் தெரி வித்தனர்.