வேலூர், டிச.15- பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகள் கொள்ளளவு நீர் மட்டத்தை உயர்த்த குழு அமைக்கப்பட் டுள்ளதாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள அம்முண்டியில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு, நடப்பாண்டுக்கான கரும்பு அரவை பணியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் நீர்வளத்துறை அமைச் சர் துரைமுருகன் கூறும்போது, ‘‘சென்னையைச் சுற்றி நீர் நிலை களை உருவாக்க தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக ஆலோ சித்து வருகிறது. ராமனஞ்சேரி யில் மிகப்பெரிய தடுப்பணை கட்ட ஆலோசனை செய்யப் பட்டது. ஆனால், அங்குள்ள மக்கள் போதிய அளவு ஒத்து ழைப்பு அளிக்கவில்லை.
மற்றொரு இடமாக திருக்கழுக் குன்றம் ஏரியில் கடந்த ஆட்சி யாளர்கள் தடுப்பணைகள் கட்ட முயற்சி செய்தும் முடியவில்லை. எனவே, சென்னை சுற்றியுள்ள பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் ஒரு அடி அளவுக்கு கொள்ளளவு நீர்மட்டத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இதற்காக, குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
அந்த குழு அறிக்கையின்படி அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னை சுற்றி உள்ள நீர்நிலைகளை ஆக்கிர மித்துள்ள பகுதிகள் அதிகளவில் அகற்றப்பட்டுள்ளன. ஆக்கிர மிப்புகளை அகற்றும் பட்சத்தில் அரசியல் தலையீடும் உள்ளது” என்றார்.