districts

img

வாழைமரங்களை நாசம் செய்த காட்டு யானைகள்

இராஜபாளையம், ஜூன் 18- விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள விவசாய விளை நிலங்களில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக புகுந்து  பயிர்களை நாசம் செய்து வருகின்றன. வனத்துறையினர் நடவடிக்கை இல்லாததால் விவசாயிகள் வேதனைய டைந்துள்ளனர்.  விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கல்லாத்து காடு உள்ளது.  இப்பகுதியில் தர்மபுரம் தெருவைச் சேர்ந்த முத்து பாலா ராஜா என்பவர் வாழை, தென்னை, மா, பலா மரங்கள் வளர்த்து வருகிறார். இவரது தோப்பிற்குள் கடந்த மூன்று  தினங்களாக தொடர்ந்து யானை கூட்டங்கள் உள்ளே நுழைந்து வாழை மரங்களை ஒடித்து நாசம் செய்தும், பலாக் காய்களை கீழே தள்ளி மிதித்தும் கம்பி வேலி களை தகர்த்து எறிந்து உள்ளே நுழைந்து நாசம் செய்து வரு கின்றன. இதுகுறித்து வனத்துறையினரிடம் முத்து பாலா  ராஜா பலமுறை முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை என்று வேதனையுடன் தெரிவிக்கின்றார்.  கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பகுதியில் யானை  கூட்டங்கள் அட்டகாசம் செய்து வருவதால் மின் வேலி  அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்குமாறு விவசாயிகள் சார்பில் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.