districts

அரசியலை தீர்மானிக்கும் அளவிற்கு சிஐடியுவை வலுப்படுத்துவோம்! அ. சவுந்தரராசன் பேச்சு

சாத்தூர், மே 31- சிஐடியு அமைப்பில் இன்னும் பல மடங்கு உறுப்பினர்களை சேர்ப்பதன் மூலம் அரசியல் போக்கைத் தீர்மானி க்கக் கூடிய சக்தியாக தொழிலாளி வர்க்கம் மாறும் என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் கூறினார். விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் சிஐடியு-வின் 55-ஆவது அமைப்பு தின சிறப்புக்கூட்டம் மே 30 வியாழக் கிழமையன்று நடைபெற்றது.

 இக்கூட்டத்தில் அ. சவுந்தரராசன் பேசியதாவது: 1970-இல் சிஐடியு என்ற போர்ப்படை உருவானது. நாடு முழுவதும் தொழி லாளர்களின் மாபெரும் எழுச்சி ஏற் பட்டது. இது அரசியலிலும் பிரதிபலித்தது. இதனைக் கட்டுப்படுத்தவே 1975-இல் நாடு முழுவதும் அவசரநிலை கொண்டுவரப்பட்டது. இதனை எதிர்த்து  சிஐடியு களத்தில் நின்றது. ஏராள மான தலைவர்கள் சிறையில் அடைக்க ப்பட்டனர். பலர் தலைமறைவாக இருந்து இயக்கப் பணி ஆற்றினர்.

ஒன்றுபட்ட தஞ்சை பகுதியில் விவ சாயிகள், விவசாயத் தொழிலாளர்களை அணி திரட்டும் இயக்கம் நடைபெற்றது. தீண்டாமைக்கு, உழைப்புச் சுரண்ட லுக்கு எதிராக செங்கொடி இயக்கம் போராடியது. ஒன்றுபட்டால், ஜமீனை யே தூக்கி எறிய முடியும் என நிரூபிக்கப் பட்டது. அமைப்பாய் திரள்வதை எந்த முதலாளியும், முதலாளித்துவ அரசும் விரும்பாது. உலகம் முழுவதும் தொழி லாளர்கள் சங்கம் வைக்க உரிமை உள்ளது. சிஐடியு எழுப்பும் முழக்கங்கள் மற்றும் கோரிக்கைகளை, பி.எம்.எஸ். உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்கங்களும் ஏற்கும் வகையில் உள் ளது.  

வலுவான கூட்டு இயக்கங்களால் அரசாங்கத்தை பின்னுக்குத் தள்ள முடியும். ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கூட விபத்து ஏற்படுத்தினால் 2 வருட தண்ட னை மட்டுமே. ஆனால், தற்போது 10 ஆண்டுகள் சிறை எனவும் ஓட்டுநர் உரிமம் ரத்து என்றும் ஒன்றிய பாஜக  அரசு கூறுகிறது. இச்சட்டம் தொழி லாளர்களின் வாழ்வுரிமையை பறிக்கும். தொழிலாளர் நலவாரியத்தில் மிகப்பெரிய மாற்றத்தை செய்ய வேண்டும். இன்றைய அமைப்பு தினத்தில் நாம் இன்னும் பல மடங்கு உறுப்பினர்களை சேர்க்க வேண்டுமென உறுதியேற்க வேண்டும்.

அவ்வாறு செய்யும் பட்சத்தில், இதுதான் நாடு பயணிக்க வேண்டிய அரசியல் பாதை என்பதை தீர்மானிக்கக் கூடிய  இடத்தில் தொழிலாளி வர்க்கம் இருக்கும். நாம் நடத்தும் போராட்டத்தில் மற்றவர்களும் இணைந்து கொண்டால் வெற்றி நிச்சயம். முதலாளிகள் இல்லாமல் இந்த உலகம் இருக்கும். ஆனால், தொழிலாளர்கள் இல்லாமல் இந்த உலகம் ஒரு நொடி கூட இயங்காது.இவ்வாறு அ. சவுந்தரராசன் பேசினார்.  சாத்தூர் தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஏ. சீனிவாசன் தலைமை தாங்கினார்.

எஸ். மனோஜ்குமார் முன்னிலை வகித்தார். வி.சந்திரன் வரவேற்றார். சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே. விஜயகுமார் துவக்கவுரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் எம். அசோகன், மாவட்டச் செயலாளர் பி.என். தேவா, மாவட்ட துணைச் செயலாளர் எம். சாராள் ஆகியோர் உரையாற்றினர். எம். பாண்டியன் நன்றி கூறினார். மாவட்டப் பொருளாளர் வி.ஆர். செல்லச்சாமி, எஸ்தர் ராணி, ஜமுனா, ரமேஷ்பாபு, முருகன், மகேஸ்வரி, கருப்பசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.