வெம்பக்கோட்டை, ஆக.18- வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் முத்திரை, விளக்கு மற்றும் கல்பந்து, கல்லால் ஆன சில்வட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி முதற்கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு செப்டம்பர் வரை நடைபெற்றது.
2ஆம் கட்ட அகழாய்வு கடந்த 2023 ஏப்ரல் 6இல் துவங்கப்பட்டது. இரு கட்ட ஆய்வின் போதும், தொன்மையான மனிதர்களால் பயன் படுத்தப்பட்ட பானை ஓடுகள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டன. மேலும், நுண்கற்கால கருவிகள் மற்றும் பல வகையான பாசிமணிகள், சுடுமண்ணாலான பொம்மைகள், தக்களி, சங்ககால வளையல்கள், மோதிரங்கள், சில்லு வட்டுகள், இரும்பு உருக்கு கழிவுகள், சங்கு வளையல்கள், 10க்கும் மேற்பட்ட திமிலுடன் கூடிய காளை உருவ பொம்மைகள் கண்டெ டுக்கப்பட்டன. 3ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த 2024 ஜூன் 18 இல் துவங்கப்பட்டது. அதில், கண்ணாடி மணிகள், சுடுமண் பொம்மை, செப்புக்காசு, சுடுமண் அணிகலன்கள், வடிதட்டு மற்றும் கி.பி 16ஆம் நூற்றாண்டு செப்புக் காசு என 1400க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இந்த நிலையில் ஞாயிறன்று நடைபெற்ற அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட புள்ளிகளுடன் கூடிய சுடுமண் முத்திரை, அலங்கரிக்கப்பட்ட விளக்கு, கல்பந்து, கல்லால் ஆன சில்லு வட்டு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் முன்னோர்கள் விலங்கு களை விரட்டுவதற்காக கல்பந்தை பயன்படுத்தி யதும், முத்திரை மூலம் வணிகம் செய்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர். (ந.நி.)