districts

img

மக்களுக்கு அதிக உப்புத்தன்மை கொண்ட ஆணைக்குட்டம் அணை தண்ணீரை வழங்கக்கூடாது விருதுநகர் நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்கள் எதிர்ப்பு

விருதுநகர், மார்ச் 1- விருதுநகர் பொது மக்களுக்கு உப்புத்தன்மை அதிகம் வாய்ந்த ஆணைக்குட்டம் அணைத் தண்ணீரை வழங்க பெரும்பான்மையான உறுப்பி னர்கள் நகராட்சிக் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். விருதுநகர் நகராட்சி சாதாரணக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் ஆர்.மாத வன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் சி.ஸ்டான்லி பாபு, பொறி யாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு: கூட்டம் துவங்கியதும், நகராட்சி மன்றப் பொருளுடன் சேர்த்து நகராட்சி ஊழியர்கள் பணிகள் பற்றியும், சொத்து  வரி பெயர் மாற்றம், புதிய வரி, கட்டிட வரைபட அனுமதி போன்றவைகள் சம்  பந்தப்பட்ட வார்டு உறுப்பினரின் கண் காணிப்பில் நடைபெற வேண்டுமென தலைவர்  அறிவிப்பு கொண்டு வந்தது  சரியல்ல. இது தவறான முன்னுதாரண மாகும். ஊழியர்கள் தவறு செய்தால் ஆணையாளர் மூலம் நடவடிக்கை எடுங்கள் என சிபிஎம் உறுப்பினர் ஜெயக்குமார் தெரிவித்தார். ஆணைக்குட்டம் தடுப்பணையில் உள்ள தண்ணீரில் அதிக அளவில் உப்பு,  சுண்ணாம்புத் தன்மை மற்றும்  கிருமி கள் உள்ளதாக பரிசோதனையின் முடி வில் தெரிய வந்துள்ளது. எனவே, அந்த  தண்ணீரை பொது மக்களுக்கு விநி யோகிக்க கூடாது என உறுப்பினர்கள் முத்துலட்சுமி, முத்துராமன், ஜெயக்  குமார், சுல்தான் அலாவுதீன், மதியழ கன் உள்ளிட்ட பெரும்பாலானோர் தெரி வித்தனர். அதற்கு பதிலளித்த ஆணையாளர், கோடை கால நீர்த் தேக்கம் மற்றும்  தாமிரபரணி குடிநீர் வழங்க நடவடிக்கை  எடுக்கப்படும். மேலும், ஒண்டிப்புலி நீர்த்  தேக்கத்திலிருந்து வரும் குழாய்களின் உடைப்புகள் சரி செய்யப்பட்டு அந்த தண்ணீரும் வழங்கப்படும் என தெரி வித்தார். புதிய பேருந்து நிலையம் இயங்காத நிலையில் ஏன்  செலவு செய்து வேலி  அமைக்க வேண்டுமென? உறுப்பினர் கலையரசன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆணையாளர், புதிய பேருந்து நிலையத்திற்கு சொந்த மான  நிலம் ஒன்றரை ஏக்கர் உள்ளது.  அதைச் சுற்றி வேலி அமைத்து பாது காக்க வேண்டுமென தனிநபர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதன் அடிப்படையில் வேலி அமைத்து வழக்கு முடிக்கப்பட்டுள்ளது என்றார். பழுதான எல்.இ,டி விளக்குகளை பராமரிக்காமல்  குழல் விளக்கு மாட்டப்  படுவது ஏன்? என உறுப்பினர் வெங்க டேஷ் கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய பொறியாளர், அடுத்த மாதம் நடைபெறும் ஏலத்தில் எல்.இ.டி விளக்குகள் மாற்ற நட வடிக்கை எடுக்கப்படும் என தெரி வித்தார். குழாய்கள் பதிப்பதற்காக குடிநீர் வடிகால் வாரியத்தினரால் சாலைகள் தோண்டப்பட்டன. ஆனால், அந்த இடத்தில் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லையென உறுப்பினர் பேபி புகார் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த தலைவர், ஒவ்வொரு பகுதியாக பராமரிப்பு பணி கள் நடைபெற்று வருகிறது என தெரி வித்தார். இவ்வாறாக விவாதம் நடை பெற்றது.