தேனி, ஜன.24- கலை, இலக்கிய போட்டிகளில் மாநில, மாவட்ட அளவில் வெற்றி பெற்ற வர்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலி யுறுத்தி முதுகலை பட்டதாரி ஒருவர் பதக்கம், விருதுகள், நினைவு பரிசுகளு டன் வந்து தேனி ஆட்சியரிடம் மனு அளித்தார். தேனி மாவட்டம் பாளையம் அருகே ராயப்பன்பட்டியை சேர்ந்த சித்தேந்தி ரன் தேனி ஆட்சியர் க.வீ.முரளீதரனை நேரில் சந்தித்து அளித்த மனுவில், முது கலை விலங்கியல் மற்றும் கல்வியியல் பட்டம் பெற்றும், தட்டச்சு தேர்வில் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றுள்ளேன். மேலும் தேசிய அளவில், தென் மாநில அளவில், மாநில அளவில் தமிழக அரசு, பல்கலை கழகம் சார்பில் நடை பெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடம் பெற்று பரிசு, சான்றிதழ் பெற்றும் தனக்கு அரசு பணி கிடைக்க வில்லை. அதே நேரத்தில் விளையாட்டு துறையில் பரிசு, சான்றிதழ் பெற்றால் இட ஒதுக்கீடு அடிப்படையில் வேலை கிடைத்திருக்கும். கலை, இலக்கிய துறையில் படைப்பாளியாக இருக்கும் என் போன்ற ஆர்வலர்கள் இட ஒதுக்கீடு இல்லாத நிலையில் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறோம். எனவே, அரசு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்று அரசு பணி கிடைக்கவில்லை. எனவே அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கி அரசு பணி வழங்கும் படி மனுவில் தெரிவித்துள்ளார்.