‘நாட்டைக் காப்போம்’ பிரச்சார கலைக்குழுவிற்கு விருதுநகரில் வரவேற்பு
விருதுநகர். அக்.13- இந்தியாவை காப்போம்-நாட்டை பாதுகாப்போம் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விருதுநகருக்கு வந்த கலைக்குழுவிற்கு தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை மற்றும் சிறுபான்மை மக்கள் நல குழு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. விருதுநகர் மூளிப்படி அரண்மனை அருகே நடை பெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேனி வசந்தன் தலைமையேற்றார். நகர்மன்றத் தலைவர் ஆர்.மாதவன், திமுக நகரச் செயலாளர் தனபாலன், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் பாலகிருஷ்ண சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரப்புரைத் தலைவர் செளரிராஜன் கலைநிகழ்ச்சி துவக்கவுரை யாற்றினார். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வின் பேசினார். மாவட்டத் தலைவர் எஸ்.கே.இராஜேந்தி ரன் சிறப்புரையாற்றினார். இதில், விசிக சார்பில் சக்திவேல், அருட்தந்தை சிபி, சிபிஎம் மூத்த தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் ஆகி யோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
பழுதாகி நின்ற லாரி மீது டூவீலர் மோதி விபத்து சார்பு ஆய்வாளர் பலி
விருதுநகர், அக்.13- விருதுநகர் அருகே சூலக்கரை காவல் நிலையத்தைச் சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் புஷ்பராஜ். ஆமத்தூர் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணி புரிபவர் கார்த்தி. இவர்கள் இருவரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் வழக்கு விசாரணைக்காக சென்று கொண்டி ருந்தனர். சாத்தூர்- விருதுநகர் சாலையில் கணபதி மில் அருகே உள்ள சேவைச் சாலையில் சென்ற போது, சாலை யோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த னர். இதில் புஷ்பராஜ் சிகிச்சை பலனின்றிஉயிரிழந்தார். காவலர் கார்த்தி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து விருதுநகர் பஜார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் ஒன்றிய வளர்ச்சித் திட்டப் பணிகள் : கோ-ஆப் டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் ஆய்வு
விருதுநகர். அக்.13- விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கோ ஆப் டெக்ஸ் நிறு வனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆனந்த்குமார் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். விருதுநகர் அருகே உள்ள இனாம்ரெட்டியபட்டி அரசுப்பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் வழங்கப் படும் உணவின் தரம் குறித்தும், அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை, வழங்கப் படும் ஊட்டச்சத்து உணவுப்பொருட்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும், ஒண்டிபுலிநாயக்கனூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4.30 லட்சத்தில் 420 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கும் பணி யையும், கன்னிச்சேரிபுதூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள பிரசவ அறை, கவனிப்பு அறை, சித்த மருத்துவ பிரிவு, மருந்துகளின் இருப்பு ஆகிய வற்றை ஆய்வு செய்தனர். பின்னர், தம்மநாயக்கன்பட்டி யில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.0.95லட்சம் மதிப்பில், முருங்கை மரங்கள் நட்டு பராமரிக்கப்பட்டு வருவதையும் ஆய்வு செய்தனர். ஆய்வில், திட்ட இயக்குநர் தண்டபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உலக ரத்த உறைவு தினம்
விருதுநகர், அக்.13- விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் உலக ரத்த உறைவு தினத்தையொட்டி பயிலரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வர் சங்குமணி தலை மை வகித்தார். அதில் ரத்த உறைவு அறிகுறிகள், அதை தடுக்கும் முறைகள், ரத்த உறைவுக்கான சிகிச்சை முறை கள் ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில், மூத்த மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
ஆதிதிராவிடர், பழங்குடியினவர்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் வங்கிக்கடன் இராமநாதபுரம் ஆட்சியர் தகவல்
இராமநாதபுரம், அக்.13- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தொழில் முனைவோரின் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவர், ஆவின் பாலகம் அமைத்தல் மற்றும் விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார். 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராகவும் அத்துடன் கூடுதலாக இதர கட்டுமான பொருட்கள் மூலம் விற்பனை செய்து வருவாய் ஈட்டும் வகையில் ஆதிதிராவிடர்களுக்கு திட்டத் தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகப்பட்சம் ரூ.2.25 லட்சம் மானியமும் பழங்குடியினருக்கு திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.3.75 லட்சம் மானியமும் விடுவிக்கப்படும். 50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உறைவிப்பான் (Freezer) குளிர்விப்பான் (Cooler) போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிடும் வகையில் ஆதிதிராவிடர்களுக்கு திட்டத் தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகப்பட்சம் ரூ.2.25 லட்சம் மானியமும் பழங்குடியினருக்கு திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.3.75 லட்சம் மானியமும் விடுவிக்கப்படும். 200 நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்களுக்கு சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகப்பட்சம் ரூ.5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பொருளதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும் (www.tahdco.com) மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
இராமநாதபுரம், அக்.13- இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு பயிர் காப்பீட்டு நிறுவனம் முறையாக ஆய்வு செய்து இழப்பீடு வழங்கவில்லை. மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் தலையீடு செய்து இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.முத்துராமு விடுத்துள்ள அறிக்கையில், ‘‘இராம நாதபுரம் மாவட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டு கடும் வறட்சியால் நெல் மிளகாய் மற்றும் சிறுதானியங்கள் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு நிறுவனம் முறையாக ஆய்வு செய்து இழப்பீடு வழங்காமல் மாவட்டத்தில் சுமார் 100 வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு காப்பீடு செய்த நிறுவனம் இழப்பீடு வழங்காமல் விடுபட்டுள்ளது. எனவே, விடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் தலையீடு செய்து பயிர் இழப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இக்கோரிக்கையை வலியுறுத்தி அக்டோ பர் 25 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார்.