தூத்துக்குடி, டிச.21- தூத்துக்குடி மாநகராட்சி 52 ஆவது வார்டு மாணிக்க விநாயகர் கோவில் தெருவில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையை சீரமைத்து, மழைநீர் .கழிவுநீர் தேங்காமல் அப்பு றப்படுத்திட வாறுகால் வசதி செய்தி டக் கோரி காத்திருக்கும் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக் குடி புறநகரகுழு உறுப்பினர் த.வன்னிய ராஜா தலைமையில் ஜெஎஸ் நகரில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத் தில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இரா.பேச்சிமுத்து, பி.பூமயில், புறநகர செயலாளர் பா.ராஜா உள்ளிட்டோர் பேசினர். போராட்டக் குழுவினரோடு சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தினார். தெருச் சாலை வடிகால் வசதி செய்ய பத்து லட்சம் ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் சாலை வசதி செய்து தரப்படும் என உறுதி அளித்தார் இதனை தொடர்ந்து தற்காலிகமாக காத்திருக்கும் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. போராட்டத்தில் புற நகரகுழு உறுப்பினர்கள் இ.முருகன், மு.சுப்பையா, பா.சரஸ்வதி, சிபிஎம் ஊழி யர்கள் ,பொதுமக்கள் த.பொம்முத்தாய் ஜோயி, பி.அய்யலுசாமிசாமி, ச.விஜய குமார் ஹைரூநிஷா சி.சந்திரன் அ. அல்லாபிச்சை மீ.ரிஸ்வான் செல்லத் துரை ராமச்சந்திரன் ரங்கராஜ் செந்தில் காளியம்மாள் ம.சண்முகத்தாய் லட்சுமி பா.வசந்தா அரியநாச்சி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.