districts

மதுரை முக்கிய செய்திகள்

 அடையாளம் தெரியாத  முதியவர் தற்கொலை 

கடமலைக்குண்டு, செப்.11- கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் அமைந்துள்ள அரசரடி அருகே பொம்மி யம்மன் கோவில் அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மரத்தில் தூக்குப் போட்டு இறந்த நிலையில் இருந்துள்ளார்.  இதுகுறித்து அப்பகுதியில் ஆடு மேய்ச்சலில் ஈடுபட்டி ருந்த மலைக்கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் மயி லாடும்பாறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரி வித்தார். மேலும் முதியவர் தற்கொலை செய்து கொண்ட  பகுதி ஹைவேஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ளதால், இறந்த முதியவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஹைவேவிஸ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து முதியவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசைப்படகு மீனவர்கள்  கடலுக்கு செல்லவில்லை

தூத்துக்குடி, செப்.11- தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 260 விசைப்படகுகளில் மீனவர்கள்  மீன்பிடித் தொழி லில் ஈடுபட்டு வருகின்றனர் .இவர்கள் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு சென்று மீன்பிடித்து விட்டு இரவு எட்டு  மணிக்கு கரைக்குத் திரும்புவது வழக்கம். இந்த நிலை யில் தூத்துக்குடி கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதாலும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த தன் காரணமாகவும் திங்களன்று தூத்துக்குடி மீன் பிடி  துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வில்லை. இதன் காரணமாக சுமார் 240 விசைப்படகுகள் கரையில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

கொலை முயற்சி: வாலிபர் கைது

   திருநெல்வேலி ,செப். 11- நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி  அருகே உள்ள பருத்தி பாட்டை சேர்ந்த பால கிருஷ்ணன்  மனைவி அமிர்தலெட்சுமி ( 47). ஞாயிற்றுக்கிழமை இவ ரும், இவரது மகள் சரண்யாவும் (27) அங்குள்ள பொது  நல்லியில் குடிநீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது  அவர்களுக்கும், அதே ஊரைச் சேர்ந்த விஜயகுமார் மனைவி செல்வ குமாரிக்கும் (44) தண்ணீர் பிடிப்பதில்  தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த செல்வ குமாரியின் மகன் நாகராஜன் (27) சரண்யா மீது மோட்டார்  சைக்கிளை ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.  மேலும் அமிர்த லெட்சுமி, சரண்யா ஆகிய இருவரை யும் அரிவாளால் வெட்டவும் முயற்சி செய்துள்ளார். இதில்  காயமடைந்த சரண்யா சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி மூலைக்கரைப் பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜூ மற்றும் போலீ சார் செல்வகுமாரி, அவரது மகன் நாகராஜன் மீது கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான வன்முறை சட்டம்  உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி நாகராஜனை கைது செய்தனர்.

கார்சேரி ஊராட்சி தலைவர் கொலை வழக்கு: 8 பேருக்கு ஆயுள் தண்டனை

மதுரை, செப்.11-  கடந்த 2015-ஆம் ஆண்டில் கார்சேரி ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்த கருப்புச்சாமி கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போதைய ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் உட்பட 8 பேருக்கு மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் கார்சேரி ஊராட்சி  மன்றத் தலைவராக பதவி வகித்த கருப்புச்சாமிக்கும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கும் முனியசாமி இடையே தேர்தல் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.  இந்நிலையில், கடந்த 2015 பிப்ரவரி 27  அன்று கார்சேரி கோவில் பகுதியில் சக்கி மங்கலம் அதிமுக கிளைச்செயலாளரும், கார்சேரி ஊராட்சி மன்றத்  தலைவராக பதவி வகித்த கருப்புச்சாமி தனது மகனு டன் நின்று கொண்டிருந்தபோது, அரி வாளால் வெட்டி, கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்து சிகிச்சைக்கு அனுமதிக் கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயி ரிழந்தார். இதுகுறித்த வழக்கில் சிலைமான் காவல்துறையினர் தமிழ்ச்செல்வம் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட  நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.  இந்த நிலையில், இந்த வழக்கு மீதான  விசாரணை மதுரை மாவட்ட 6-ஆவது கூடு தல் நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன், மதுரம் முன்பு திங்களன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, தேர்தல் முன்விரோதம் கார ணமாக நடைபெற்ற கார்சேரி ஊராட்சி மன்ற தலைவர் கருப்புசாமி கொலை செய்யப்பட்ட வழக்கில் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், சக்கிமங்கலத்தை சேர்ந்த தமிழ்செல்வம், சௌந்திரபாண்டி, பிரபுதேவா, தற்போதைய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் இளவரசன், கவி யரசன், அஜித், வெண்ணிலா, முனியசாமி  ஆகிய 8 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும்  அபராத தொகை விதித்து நீதிபதி உத்தரவு  பிறப்பித்தார். ஆயுள் தண்டனை பிறப்பிக் கப்பட்ட 8 பேரும் மதுரை மத்திய சிறையில்  அடைக்கப்பட்டனர்.

மூதாட்டியிடம் நகை பறிப்பு

ஒட்டன்சத்திரம், செப்.11-  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள  அம்மாபட்டியில் தெற்குதோட்டத்தில் உத்தமி (72) என்ப வர் வசித்து வருகிறார். இவர் ஞாயிறன்று காலை தனது தோட்டத்தில் மாடு  மேய்த்துக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் இருவர், தங்களை முருங்கை வியாபாரிகள் என்றும்  இப்பகுதியில் முருங்கை வாங்குவதற்காக வந்ததாக கூறி யுள்ளனர். இதை நம்பி உத்தமி பேசிக்கொண்டிருந்தார்.  அப்போது குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். மூதாட்டி வீட்டுக்குள் சென்று தண்ணீர் கொண்டு வந்த போது, 2 பேரும் உத்தமியின் கழுத்தில் அணிந்திருந்த 2.5 பவுன் நகையை பறித்து விட்டு, அங்கிருந்து தப்பிச்  சென்றுவிட்டனர். 

இரு சக்கர வாகனம் மாயம்

விருதுநகர், செப்.11- விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் அருண்குமார்(26). இவர் தனது இரு சக்கர வாக னத்தை ரயில்வே சிக்னல் அலுவலகம் அருகே நிறுத்தி  விட்டு நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளார்.  திரும்பி வந்து பார்த்த போது, வாகனத்தை காண வில்லை. இதுகுறித்து விருதுநகர் ஊரக காவல் நிலை யத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

சின்னாளப்பட்டி, செப்.11- திண்டுக்கல் மாவட்டம் சித்தையங்கோட்டையை அடுத்த அழகர் நாயக்கம்பட்டியைச் சேர்ந்தவர் மூர்த்தி  (38). விவசாயியான இவருக்கு பாண்டி செல்வி என்ற மனைவியும், அபினத், பிரகாஷ் என்ற மகன்களும் உள்ளனர்.  இவர் சித்தையங்கோட்டையில் தென்னந்தோப்பை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், ஞாயிறன்று இரவு தென்னந்தோப்புக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது, ஏற்பட்ட மோட்டார் பழுதை நீக்கும் போது, எதிர்பாராத விதமாக, அவர் மீது  மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார்.  இதுகுறித்து தகவலறிந்த செம்பட்டி காவல்துறை யினர், மூர்த்தியின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு  மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். 

பெரியாறு அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு லோயர் கேம்பில் அதிகரித்த மின் உற்பத்தி

தேனி, செப்.11- கடந்த சில நாட்களாக முல்லைப் பெரியாறு அணை  நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி யதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையிலிருந்து தமிழக பகுதிக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்காக 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.  திங்கள் கிழமை காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக உள்ளது. வரத்து 510 கன அடி.  அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள தால் லோயர் கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் 36 மெகாவாட்டிலிருந்து 2 ஜெனரேட்டர்கள் மூலம் 46 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது.  வைகை அணையின் நீர்மட்டம் 47.11 அடியாக உள்ளது. வரத்து 8 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு  1634 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.10 அடி. சோத்துப்பாறை நீர்மட்டம் 79.04 அடி. வரத்து  மற்றும் திறப்பு 3 கன அடி. மழையளவு பெரியாறு 12.8, தேக்கடி 2.8, கூடலூர் 1.4, உத்தம பாளையம் 1.2, சண்முகா நதி அணை 1.6, மஞ்சளாறு 6, சோத்துப்பாறை 4, பெரியகுளம் 3.6 மி.மீ மழை யளவு பதிவானது.