மதுரை, மே 31- மதுரை மாநகராட்சி தொழிலா ளர்களின் 28 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி சிஐடியு மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு சுகா தார பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், மதுரை மாநகராட்சி துப்புரவு தொழி லாளர் மேம்பாட்டு தொழிற்சங்கம் (விசிக) ஆகிய மூன்று சங்கங்களின் கூட்டு தலைமை சார்பில் மே 30 திங்க ளன்று முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். வேலைநிறுத்தத்தில் இரண்டாவது நாளான செவ்வாயன்று 6 ஆயிரத்திற் கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதி யான மேலவாசலில் போராட்டத்தில் ஈடு பட்டிருந்த மதுரை மாநகராட்சி தொழி லாளர் சங்க பொதுச் செயலாளர் எம். பாலசுப்பிரமணியம் கூறுகையில். திங்க ளன்று மதுரை மாநகராட்சி ஆணை யாளர் தொழிற்சங்க பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். சுகாதார பணியாளர் சங்க பொதுச் செய லாளர் அம்சராஜ் மற்றும் நிர்வாகிகள், மதுரை மாநகராட்சி துப்புரவு தொழிலா ளர்கள் மேம்பாட்டு சங்க பொதுச் செய லாளர் பூமிநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதில் மாநகராட்சி ஆணையாளர், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 14 கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக கூறினார் வி. ஆர். ஜி., சபரி போன்ற இரண்டு நிறுவனங்களில் ஒப்பந்தங்களையும் ரத்து செய்வதாக வும் கூறியுள்ளார். தமிழக அரசு கோரிக் கைகளான ஒப்பந்த பணியாளர்கள் நிரந் தரம் மற்றும் தொகுப்பூதிய பணியா ளர்கள் காலமுறை ஊதியத்திற்கு மாற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். எனவே அரசு அதற் கான உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். அது வரை எங்களுடைய போராட் டம் தொடரும். மதுரை மாநகராட்சியில் உள்ள மண்டலங்களில் தற்காலிக பணியாளர்களை மண்டல தலைவர்கள் சிலர் நியமித்து அவர்களுக்கு 550 ரூபாய் ஊதியம் நிர்ணயம் செய்து சில பகுதிகளில் குப்பைகளை அள்ளுவ தற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இது முழு மையான அளவில் வெற்றி பெறாது. அதேபோல் மாநகராட்சியில் உள்ள தொழிலாளர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய வார்டு களில் மாநகராட்சி தொழிலாளர்கள் இல் லாமல் வேறு வகையில் தொழிலாளர் களை நியமித்து பணிகளை மேற்கொள் ளக் கூடாது என்று மாநகராட்சி அதிகாரி களுக்கும் மண்டல தலைவர்களுக்கும் வலியுறுத்தியுள்ளனர். அந்த அடிப்ப டையில் எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கைகளை முன்வைத்துத்தான் போராட்டத்தை நடத்தி வருகின்றோம். எனவே பொதுமக்களும் வணிக நிறு வனங்களும் எங்களுக்கு ஆதரவு அளித் திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் டி.குமரவேல், வை. ஜென்னியம்மாள், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்டச் செய லாளர் க. நீதிராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் இரா.தமிழ், பல்கலைக் கழகம்- கல்லூரி ஆசிரியர் மற்றும் பேரா சிரியர்கள் கூட்டமைப்பான மூட்டா சார்பில் மதுரை மாவட்ட செயலாளர் ஏ.டி.செந்தாமரைக்கண்ணன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் பி.கோபிநாத், செயலாளர் டி.செல்வா உள்ளிட்ட பல ரும் மாநகராட்சி தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரித்துப் பேசினர். இரண்டாவது நாள் போராட்டத்தில் சிஐடியு மதுரை மாநகராட்சி தொழிலா ளர் சங்க மாவட்டத் தலைவர் மீனாட்சி சுந்தரம், பொருளாளர் கருப்பசாமி, தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செய லாளர் அம்சாராஜ், தலைவர் பட்டன், மதுரை மாநகராட்சி துப்புரவு தொழி லாளர் மேம்பாட்டு தொழிற்சங்கம் (விசிக) சார்பில் நிர்வாகிகள் பூமிநாதன் முத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.